Saturday, July 25, 2020

பரிந்துரைக்கிறேன்

இளம் கவிஞரின் சிந்தனை துளிகளை ரசித்து உங்கள் ஆதரவை தெரிவியுங்கள்....

matthoughtspoems.blogspot.com


நன்றி

Monday, June 23, 2014

சிறுவர்களின் குறும்படம்

பிராணவாயுவையும், மழையையும். நில வளத்தையும்
தரும் மரங்களின் மீது உங்களுக்குப் பிரியமுண்டா?
எனில் இந்த சிறுவர்களின் குறும்படத்தைப்
பாருங்கள்,,,,



Saturday, April 26, 2014

"நீரின்றி" குறும் படம் ...

நீரின்றி அமையாது உலகென்றார் திருவள்ளுவர்

சரியான் நீர் நிர்வாகத்தின் மூலமே ஒரு நாட்டை 

வளப்படுத்த முடியும். நீர் நிர்வாகம் சரிவர பேணினால் 
உற்பத்தியும் வாங்கும் திறனும் உயர்ந்து அனைத்து தொழில்களும்
வளர்ச்சியடையும் அனைத்து மக்களும் வளம் பெறுவர்.

 
இந்திய விவசாயிகள் நீரின்றி பெரும் வாழ்க்கை
போராட்டத்தில் இருக்கிறார்கள். இதை தீர்க்க
நதிநீர் இணைப்பு ஒரு நிரந்தர தீர்வாகும். இதை
வலியுறுத்துவதே இந்த படத்தின் நோக்கம். இதை
நிறைவேற்ற நீங்களும் குரல் கொடுங்கள்.
அன்போடு
வேம்பத்தி ந.தங்கமணி 

Monday, September 24, 2012

திருநீறு, பூ அணிவதன் பயன்கள்





திருநீறு, சந்தனம் மற்றும் சிவப்பு வைப்பதில் ஒரு மருத்துவமும் ஒரு தத்துவமும் உண்டு. நாம் தலைக்குக் குளிக்கும் போது தலையில் நீர் கோர்த்து தலைவலி வருவதற்கான வாய்ப்பு உள்ளது. திருநீறு அணிவதால் தலையில் உள்ள நீர் உறிஞ்சப் படுவதுடன் நமது முகத்துக்கு முன் உள்ள காற்றின் ஈரப்பதம் குறைக்கப்பட்டு சுவாசத்தால் ஏற்படும் நுரையீரல் சம்பந்தமான நோய் வருவது தடுக்கப்படுகிறது.



நெற்றிப்பொட்டில் சந்தனம் வைப்பதால் அதற்கு உட்புறமாக உள்ள பிட்யூட்டரி என்னும் நாளமில்லாச் சுரப்பி நன்றாக செயல்பட ஏதுவாகிறது. இந்த பிட்யூட்டரி சுரப்பி தைராய்டு, தைமஸ், அட்ரினல் மற்றும் பாங்கிரியாஸ் ஆகிய நான்கு நாளமில்லாச் சுரப்பிகளை கட்டுப்படுத்தும் முக்கியமான சுரப்பியாகும். இது சந்தனத்தின் மூலம் தூண்டப்படுகிறது. கொஞ்சம் சந்தனத்தை கழுத்தில் பூசுவார்கள் இது தைராய்டு மற்றும் பாராதைராய்டு சுரப்பிகளை நன்கு செயல்படத் தூண்டுகிறது.

சந்தனத்திற்கு மேலே சிவப்பு அணிகிறோம். இந்த சிவப்பின் மூலப்பொருள் மஞ்சள் ஆகும். மஞ்சள் மிக முக்கியமான கிருமி நாசினி. இதன் வாசனை நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கிருமிகளை விரட்டுகிறது.

கோவில்களில் துளசி, அரளி பூ, வில்வ இலை ஆகியவை கொடுப்பார்கள். அதை வாங்கி சிலர் காதில் வைத்துக்கொள்வார்கள். இது நாம் சுவாசிக்கும் காற்றில் உள்ள கார்பனின் அளவைக் குறைத்து ஆக்ஜிசனை அதிகப்படுத்தி கிருமிகளையும் விரட்டுகிறது. தேசிய நெடுஞ்சாலையில் அரளிச்செடியும், தாஜ்மகாலை சுற்றிலும் துளசிச் செடியும் காற்றில் உள்ள கார்பனைக் குறைப்பதற்காக நட்டியுள்ளதைக் காணலாம்.

நமது மூளை, இதயம், நுரையீரல், கல்லீரல் போன்ற அனைத்து உறுப்புகளும் சிறப்பாக இயங்க சுத்தமான இரத்தமே மூலப்பொருளாகும். இரத்தத்தைச் சுத்தப்படுத்த நமது மூச்சுக்காற்றில் உள்ள சுத்தமான ஆக்ஜிசனே முக்கியமாகும். எனவே, மூச்சுக்காற்று சுத்தமாக திருநீறு, சிவப்பு, துளசி,அரளிப்பூ அணிந்தார்கள். இப்பச்சொல்லுங்க திருநீறு பொட்டு வைத்து காதுலெ பூ வைப்பவர் முட்டாளா? அவர்களைப் பார்த்து கேலி பேசுபவர்கள் முட்டாள்களா?

தத்துவம்
பழங்காலத்தில் இந்துக்கள் இறந்தால் சந்தனக் கட்டை வைத்து எரிப்பார்கள். சந்தனக்கட்டையோடு சேர்ந்து உடல் எரியும்போது சாம்பல் கீழே விழும் நெருப்பு (சிவப்பு) மேலே வீசும். இதை நினைவு படுத்தவே திருநீறு, சந்தனம், சிவப்பு வைக்கின்றனர். இறக்கப்போகிற உடலை வளர்ப்பதற்காக பிறர் பொருளை அபகரிக்கக் கூடாது. பிறரை துன்புறுதக் கூடாது என்பதை நினைவு படுத்துவதே இந்த தத்துவமாகும்.







Sunday, February 26, 2012

கவிதை நூல்



எனது வாழ்வை நெறிப்படுத்திய சின்னச் சின்ன
விடயங்களைத் தொகுத்து மனமே விழித்திடு
என்னும் கவிதை நூலாக வெளியிட்டுள்ளேன்.
இந்த நூல் உங்கள் வாழ்வில் எங்கோ ஒரு சிறு
ஒளியை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறேன்.



மனமே விழித்திடு என்னும் இக் கவிதை நூல்
கடந்த 17.02.2012 வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
திரு மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நூலை வெளியிட
சக்தி தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர்
திரு. என். உருத்திரேந்திரபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கள்ளிப்பட்டி தமிழியல் ஆய்வு அறக்கட்டளையின்
தலைவர் திரு.பூந்துறையன் அவர்களின் உறுதுணையுடன்
கோபி சிவமுருகன் அவர்களின் வடிவமைப்பில்
உருவான இந்நூல் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில்
விற்பனைக்குக் கிடைக்கும். விலை உரூ30.மட்டும்.

வாழ்க வளமுடன்.

.

Wednesday, December 21, 2011

திருமணச் சடங்கு சீர் திருத்தம் -2


சமூக , பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.
எனவே திருமணச்சடங்குகளில் உளவியல் மற்றும் அறிவியல் ரீதியிலான கீழ்கண்ட சில நடைமுறைகளை ஏற்படுத்துதல் நலம்.

திருமணச்சடங்குகள்
(முதலில் தவம் தெரிந்த பெரியோர்கள் சிலர் மணமேடையில் தவம் செய்து மணமக்களையும் வருகை தந்த
மக்களையும் வாழ்த்துதல் நலம் )
1. பெற்றோர் வணக்கம்
2. குரு வணக்கம்
3. பஞ்ச பூத வணக்கம்
4. நவக்கிரக வணக்கம்
5. இறை வணக்கம்
6. தாலி கட்டுதல்
7. உறுதிமொழி எடுத்தல்
8. சமுதாயநல உறுதிமொழி
9. பெற்றோர் அவையோர் வாழ்த்துப் பெறுதல்
10. நன்றி வாழ்த்து தெரிவித்தல்
11. அனைவரின் வாழ்த்து
12. ஆதரவற்றோருக்கு உணவு வழங்குதல்

1.பெற்றோர் வணக்கம்
முதலில் மணமக்கள் தங்கள் பிறப்புக்கு காரணமான பெற்றோர்களின் கால்களில் வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

2. குரு வணக்கம்
மகான் வேதாத்திரி மகரிசி, மகான் அரவிந்தர், இராமகிருட்டிணபரம கம்சர் போன்ற இறைஞானம் பெற்ற மகான்களில் ஒருவரின் படத்தின் முன்னே வீழ்ந்து வணங்குதல் வேண்டும்.

3. பஞ்சபூத வணக்கம்
மண், நீர், நெருப்பு, காற்று மற்றும் விண் ஆகியவற்றைக் கிரகித்தே தாவரங்கள் உணவுப் பொருளை உற்பத்தி செய்கிறது. எனவே பஞ்சபூதங்களாலேயே நமது உடல் உண்டாகியிருக்கிறது. பஞ்பூதங்களுக்கு அடயாளமான குத்து விளக்கை வளம்வந்து வணங்கவேண்டும்.
( குத்து விளக்கில் விளக்கு மண், எண்ணெய் நீர், தீபம் நெருப்பு, சூழ்ந்திருப்பது காற்று மற்றும் தீப வெப்பத்தால் அதைச்சுற்றிலும் காற்றில் விண் திரண்டிருக்கும்.)

4. நவக்கிரக வணக்கம்
நமது உடல் பஞ்சபூதங்களினால் ஆகியிருந்தாலும் கோள்களின் இரசாயனத்தன்மைகளினால் ஏற்படும் காந்த அலைகள் நமது உடல்இயக்கத்திற்கும், மனஇயக்கத்திற்கும் உதவுகிறது. எனவே நவக்கிரகங்களை மனதில் நினைந்து வணங்க வேண்டும். கிரகங்கள்  தொடர்பான விளக்கத்திற்கு இங்கே கிளிக் செய்யுங்கள்

5. இறைவணக்கம்
பஞ்ச பூதங்கள், நவக்கிரகங்கள் மற்றும் அனைத்து உயிர்களின் தோற்றத்திற்கும் இயக்கத்திற்கும் மூல ஆற்றலாக விளங்கும் இறையாற்றலை வணங்குதல் வேண்டும்.

6. தாலி கட்டுதல்
மணமுடித்ததற்கு அடையாளமாக தாலிகட்டுதல் வேண்டும்.

7. உறுதிமொழி எடுத்தல்
"நான் வாழ்க்கைத் துணைவராக ஏற்றுக்கொண்ட இவருடன் வாழ்நாள் முழுவதும் சகலவிதமான இன்பதுன்பங்களிலும் உடனிருந்து பங்கெடுத்துக் கொள்வேன் "
என்று மணமக்கள் இருவரும் உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.

8. சமுதாய உறுதிமொழி
(இருவரும் சேர்ந்து) " நாங்கள் எங்களுக்கும், எங்கள் குடும்பத்திற்கும், இந்த சமுதாயத்திற்கும், உலகுக்கும் மிகவும் பயனுள்ளவர்களாக வாழ்வோம். நாங்கள் யாருக்கும் துன்பமிழைக்க மாட்டோம். துன்பப் படுவோற்கு எங்களால் இயன்ற உதவிகளைச் செய்வோம். எல்லா உயிர்களும் இன்புற்று வாழ்க ! "
என்று உறுதிமொழி எடுத்துக் கொள்ளவேண்டும்.


9. பெற்றோர் அவையோர் வாழ்த்து
மணமக்கள் இருவரின் தலைக்கு நேராக பெற்றோர்கள் கைகளை நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்தவேண்டும். பின் அவையோர்கள் அனைவரும் உள்ளங்கைகளை மணமக்களை நோக்கி நீட்டி "வாழ்க வளமுடன்" என மூன்று முறை வாழ்த்த வேண்டும்.

10.நன்றி வாழ்த்து
மணமக்களும் அவர்களின் பெற்றோர்களும் அவையோரை நோக்கி நின்று
" இத்திருமணத்திற்கு வந்தவர்கள், வாழ்த்துத் தெரிவித்தவர்கள் மற்றும் இத்திருமணத்தோடு தொடர்புடைய அனைத்து அன்பர்களும் அவர்தம் அன்புக் குடும்பத்தார்களும் எல்லா நலமும் வளமும் பெற்று வாழ்க வளமுடன் "
என வாழ்த்தவேண்டும்.

11. அனைவரின் வாழ்த்து
மணமக்கள், பெற்றோர்கள் மற்றும் அவையோர்கள் அனைவரும் சேர்ந்து எழுந்து நின்று
" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "
என்று மூன்று முறை மனங்குளிர வாழ்த்தி நிறைவு செய்ய வேண்டும்.

12. ஆதரவற்றவர்களுக்கு உணவு வழங்குதல்
உறவினர்களுக்கு விருந்து வைப்பதுடன் அருகில் உள்ள ஆதரவற்றோர் முதியோர் இல்லங்களுக்கு உணவு வழங்கி அவர்களின் ஆசிர்வாதத்தைப் பெற வேண்டும்.

பழைய அர்த்தம் தெரியாத சடங்குகளை எல்லாம் விட்டு விட்டு இந்த புதிய முறைகளைப் பின்பற்றினால் மணமக்கள் எல்லா நலங்களும் வளங்களும் பெற்று நல்வாழ்வு வாழ்வார்கள்.
இதில் கருத்து வேறுபாடு உள்ளவர்கள் ஆரோக்கிமான விரிவான விவாதத்திற்கு வரவும்.

சமுதாயத்தின் முன்னேற்றத்தில் அனைத்து மக்களின் நலனில் அக்கறையுள்ள அறிவிற்சிறந்த இளைஞர்களும், அனுபவம் மிக்க பெரியோர்களும், சமுதாயச் சங்கங்களும், பல்வேறு அமைப்பின் பிரதிநிதிகளும் அன்போடும் கருனையோடும் இந்த நவீனக் கருத்துக்களை பரிசீலித்து தங்கள் சமுதாயத்தில் நடைமுறைப்படுத்தி சமுதாய நலனுக்கும் முன்னேற்றத்திற்கும் வித்திடுவார்களாக.

" அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்
வாழ்க வையகம் - வாழ்க வளமுடன் "

அன்போடு வி. என். தங்கமணி



Wednesday, November 23, 2011

திருமணச் சடங்கு -1

ஒரு சமுதாயம் தனது பழக்கவழக்கங்களில் காலத்திற்கேற்ற மாற்றங்களை செய்து கொள்ளவில்லை என்றால் அந்த சமுதாயம் மெல்ல அழிவதற்கு வெளியில் இருந்து எந்த சக்தியும் வர வேண்டியதில்லை. சமூக பொருளாதார, தொழில்நுட்ப அறிவியல் மற்றும் நாகரீக வளர்ச்சிக் கேற்ப ஒரு சமுதாயம் தனது சடங்கு சம்பிரதாயங்களில் தன்னைத்தானே மறுபரிசீலனை செய்து தேவையான மாற்றத்தைச் செய்து கொள்ளவில்லையானால் அந்த சமுதாயத்தின் அழிவினை யாரும் தடுத்து நிறுத்த முடியாது. காரணமே தெரியாமல் பல்வேறு சடங்கு முறைகளைக் கட்டியழுது கொண்டிருக்கும் ஒவ்வொரு சமுதாயமும் தனது தேவையற்ற பழக்க வழக்க சடங்கு முறைகளை உடைத்தெரிந்து உண்மையான சமுதாய முன்னேற்றத்தின் திசையில் திரும்ப வேண்டிய காலகட்டம் இது.


சடங்குகள் என்பது என்ன?

ஒரு காலத்தில் மக்களிடம் சாதாரணமாக இருக்கும் ஒரு பழக்கம் நாகரிகம் மற்றும் தொழில் நுட்ப வளர்ச்சியின் காரணமாக வேறொரு பழக்கமாக மாறும்போது அல்லது அந்த பழக்கமே வழக்கிலிருந்து ஒழிந்து போகும் போது அந்தப் பழக்கத்தை சடங்காக வைத்துக் கொள்கிறார்கள். இதில் வேறு ஒரு அறிவியல் முக்கியத்துவமும் இல்லை. இதை சொன்னது மகான் விவேகானந்தர்.


உதாரணத்திற்கு சில சடங்கு முறைகளைப் பார்ப்போம்.

நெல் இட்டு வைத்தல்

நெல்லை அரிசியாக்கும் ஆலைகள் வராத காலத்தில் திருமண விருந்துக்கு தேவையான அரிசிக்கு நெல்லை ஊறவைத்து, வேகவைத்து, உலர்த்தி கைக்குத்தல் மூலமே தயார் செய்தார்கள். இதற்கு நிறை நாள் ஆகும் என்பதால் திருமணத்திற்கு 10 நாள் முன்பாகவே ஒரு நல்ல நாளில் நெல்லை ஊறவைப்பார்கள். நவீன அரிசி ஆலைகளிலிருந்து அரிசியாகவே கொள்முதல் செய்யும் இந்தக் காலத்திலும் நெல் இட்டு (ஊற) வைத்தல் என்று சடங்காகச் செய்கிறார்கள்.


கட்டிலேற்றுதல்

வண்டி வாகனங்கள் கண்டு பிடிக்காத காலத்தில் மாப்பிள்ளையை முகூர்த்தத்திற்காக பெண் வீட்டிற்கு கட்டிலில் வைத்து தூக்கிச் செல்லும் பழக்கம் இருந்தது. இந்தப் பழக்கம் அறிவியல் முன்னேற்றத்தால் மாட்டு வண்டி, கார் என்று மாறிய போதும் கட்டிளேற்றுதல் என்று மாப்பிள்ளையை கட்டிலில் உட்கார வைத்து மூன்று முறை தூக்கி வைக்கின்றனர்.


வெற்றிலை பாக்கு (கொடுத்தல்) பிடித்தல்

முன் காலங்களில் பெரும்பாலோர் அடிக்கடி வெற்றிலை பாக்கு போடும் பழக்கமுடன் இருந்தனர். திருமண இல்லத்தில் அனைவரும் அடிக்கடி வெற்றிலை பாக்கு கேட்டுப் பெறுவது சிரமம் எனக்கருதி அனைவருக்கும் கை நிறைய வெற்றிலை பாக்கு கொடுத்தனர். வெற்றிலை பாக்கு கொடுத்தல் என்பது மருவி வெற்றிலை பாக்கு பிடித்தல் என்கிற பெயரில் இன்றளவும் வெற்றிலை பாக்கு கொடுத்தல் சடங்கு பின்பற்றப்படுகிறது.


இது போன்ற சடங்குகளால் சமுதாயத்தின் நலத்துக்கோ வளர்ச்சிக்கோ ஏதேனும் பயன் உண்டா ? பயன் இல்லை என்றால் இதை ஏன் செய்து கொண்டிருக்க வேண்டும் ? இதற்கு அனுபவம் மிக்க பெரியோர்களும் அறிவிற் சிறந்த இளைஞர்களும் ஒன்று கூடி ஒரு சிறந்த மாற்று முறையைத் தெரிவு செய்யும் சமுதாயமே காலத்தால் அழியாத உறுதித் தன்மையுடன் ஓங்கி வளரமுடியும்.

மாற்றுமுறை குறித்த சிந்தனைகளை அடுத்த கட்டுரையில் பார்ப்போம்.





Monday, October 24, 2011

கருவியும் கர்த்தாவும்


எனது வாழ்க்கை மட்டும் ஏன் இப்படி இருக்கிறது?  நான் நினைக்கும்படி
 ஏன் என்வாழ்க்கை அமையவில்லை? இவ்வாறான கேள்விகள் நம்மில் பலருக்கு ஏற்படுவதுண்டு. இதற்கான விடை என்ன ? நமது வாழ்வு எதனால் நிர்ணயிக்கப்படுகிறது.

நமது தகுதிகள் மற்றும் மனதின் தன்மை இவைகளைப் பொறுத்தே நமது வாழ்வு நிர்ணயிக்கப் படுகிறது. ஒரு விவசாயி, செய்யும் வேலைக்கேற்பவே
கருவிகளைத் தேர்வு செய்கிறார். ஒரு குச்சியை வெட்ட வேண்டுமானால் அறுவாளையும், மரத்தை வெட்ட வேண்டுமானால் கோடாரியையும், மண்ணை வெட்ட வேண்டுமானால் மண்வெட்டியையும் பயன்படுத்துகிறார். இங்கே கருவியின் தகுதியே ஒரு வேளைக்கு தெரிவு
செய்வதற்கான காரணமாகிறது.

இவ்வாறே இயற்கை என்ற பேராற்றல் அல்லது கடவுள் என்ற கர்த்தா, ஒருவரின் செயல்படும் திறன், மனதின் தன்மை மற்றும் குணம் இவற்றைக் கொண்டே அவரின் வாழ்க்கை முறையை அமைக்கிறார். தான் மட்டுமே நன்றாக இருக்கவேண்டும் என்ற எண்ணம் உடையவரை அவர் குடும்பத்தார்கூட நேசிக்கமாட்டார்கள். மாறாக ஒரு சமுதாயம் அல்லது இந்த உலகம் நன்றாக இருக்க வேண்டும் என்று நிணைப்பவரை இந்த சமுதாயமும் உலகமும் கொண்டாடுகிறது. இந்தியாவின் நலம் ஒன்றையே உயிர் மூச்சாகக் கருதியதால் மகாத்மா காந்திஜியை இந்தியாவின் தந்தை என்று மதிக்கிறோம். மனித குலத்தின் நலன் ஒன்றையே நாடியதால் சித்தார்த்தரை புத்தர் என வணங்குகிறோம்.

அப்படியானால் நாம் என்ன செய்யவேண்டும்? நாம் எந்த தொழில் செய்தாலும், எந்த நிலையில் இருந்தாலும் பரவாயில்லை. ஆனால் மனிதகுலமும், எல்லா உயிரினங்களும் சுபிட்சமாக வாழவேண்டும் என்ற
எண்ணம் வேண்டும். நீங்கள் சம்பாதிப்பதை யாருக்கும் கொடுத்துக் காப்பாற்ற வேண்டியதில்லை. நான் செய்யும் தொழில், உற்பத்தி செய்யும் பொருள் என் வளர்ச்சிக்கு காரணமான இந்த சமுதாயத்தின் நலனுக்காக என்ற நினைவு வேண்டும். எல்லோரும் நலமோடு வாழவேண்டும் என்ற அன்புள்ளம் வேண்டும். அந்த எண்ணமே உங்கள் மனதைத் தூய்மைப் படுத்தி உயர்தகுதியுடையதாக்குகிறது.

இதனால் உங்களுக்கு பல நன்மைகள் உண்டாகிறது. இதற்காக நீங்கள் பொருட்செலவு எதையும் செய்வதில்லை. இந்த நல்ல எண்ணத்தால் உங்களுக்கு மகிழ்ச்சியும், மன நிறைவும், மக்களின் அன்பும், காரிய சித்தியும்
உண்டாகிறது.

கருவியாகிய நமது தகுதியே கர்த்தா நம்மை எவ்வாறு வைத்திருப்பார் என்பதற்குக் காரணமாகிறது. இறைவனை வணங்கும் போது கூட எனக்கு அதைக்கொடு இதைக்கொடு என்று கேட்காமல் எல்லா உயிர்களும் இன்புற்று வாழ அருள்வாய் இறைவா என்று வணங்கிப் பாருங்கள். பின் எனது வாழ்க்கை ஏன் இவ்வாறு இருக்கிறது என்று புலம்ப மாட்டீர்கள்.

நல்லெண்ணமே நல் வாழ்வுக்கு வழி.
வாழ்க வளமுடன்.
.
.

Sunday, September 18, 2011

முதுகு வலிக்குத் தீர்வு


இன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் எலும்பு தேய்மானம் ஜவ்வு தேய்மானம் என்பது பெரும்பாலும் உண்மையான காரணமல்ல. பெரும்பாலான முதுகுவலிக்கு காரணம் வாயு (Gas) ஆகும். உங்களுக்கு வலி ஒரே இடத்தில் அல்லாமல் ஒரு சில நாட்களில் சற்று இடம் மாறி வலித்தால் அதற்கு காரணம் வாயுவேதான்.

அதிகமாக உண்பதால் ஜிரணித்தது போக மீதமுள்ள உணவு குடலில் புளித்துப் போய் ஒருவித வாயு உண்டாகிறது. இந்த வாயு ஏப்பமாக, கொட்டாவியாக, அபானவாயுவாக வெளியேறாவிட்டால் உயிராற்றல் பரவக்கூடிய நாடிகளில் நுழைந்து ஆற்றல் பரவுவதில் ஒரு தடை ஏற்படுகிறது. அந்த தடையே வலியாக உணரப்படுகிறது. இந்த வாயு நாடிகளில் நகர்ந்து இடம் மாறும் வாய்ப்பு உள்ளதால் வலியும் இடம் மாறுகிறது.

இந்த வலியை தவிர்க்க ஐந்து விக்ஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1. உணவு
இன்னும் இரண்டு கை சாப்பிட்டால் போதும் என்கிற போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பாட்டை வாயில் போட்டதும் வெளிக்காற்று வாயில் புகாதவாறு உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். உண்ணும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.

2. படுக்கை
பஞ்சு போன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். கயிற்றுக் கட்டிலானால் கயிறு தொங்கலாக இருப்பதைத் தவிர்க்கவும். தரையில் பாய் விரித்து தலையணை வைத்துப்படுப்பது நலம். நாம் புரண்டு படுக்கும் போது வயிற்றுக்கு ஓரளவு அழுத்தம் கிடைக்க வேண்டும். அதனால் வாயு ஏப்பமாக அபான வாயுவாக வெளியேறிவிடும்.

3. எண்ணெய் குளியல்
வருடத்திற்கு நான்கு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் முட்டு எலும்புகளில் உள்ள ஜவ்வுகளுக்கு போதுமான அளவு உராய்வுத் தன்மையைத் தாங்கக்கூடிய வளவளப்புத் தன்மை கிடைக்கும். ஜவ்வு தேய்வதில்லை, வரட்சித் தன்மையாலேயே வலி உண்டாகிறது.

4. உடற்பயிற்சி
வேதாதத்ரிய யோகத்தில் படுத்துக் கொண்டு செய்யக்கூடிய மகராசனப் பயிற்சியும் சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால் முதுகுவலி மூட்டு வலி நீங்கும்.

5. உட்க்காரும் பொழுது எப்பொழுதும் நிமிர்ந்து உட்க்கார வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் மாலை 3 மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு இருபது நிமிடம் முதுகில் வெயில் படுமாறு நிற்பது நலம். தினமும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

  உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும். ஸ்கேன் செய்து பார்த்து முதுகில் சதைக்கட்டி அல்லது நீர்க்கட்டி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம். இல்லையென்றால் மேலே சொன்ன ஐந்தையும் கடைபிடித்து நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

வாழ்க வளமுடன்.     
.

Monday, September 12, 2011

தவம்-7 சமாதி


அஸ்டாங்க யோகம் அல்லது ராஜயோகத்தின் இறுதிப்பகுதியாகிய சமாதி என்பதைப் பற்றி பார்ப்போம். ஓரிடத்தில் மனதைக் குவிப்பது தியானம். அதையே நீட்டித்து பயிலுதல் சமாதி என்றாலும் அதைவிட ஆழ்ந்த பொருளுடையது சமாதி. 

இயல்பாக ஒருவர் நான் எனச்சொல்லும் போது தனது உடல் என்றே பொருள் கொள்கிறார். எனது பேனா, எனது சட்டை என்று சொல்லும் போது அந்த பொருட்கள் எனது உடைமை. நான் வேறு அந்த பொருள் வேறு. நான் அந்த பொருள் அல்ல எனப் பொருள்படுகிறது.

அதைப் போலவே எனது கை, எனது கால், எனது உடல் என்று சொல்கிறோம். நான் கை, நான் கால், நான் உடல் என்று சொல்லுவதில்லை. எனவே நான் வேறு எனது உடல் வேறு நான் உடலல்ல என்று பொருள்படுகிறது. உடல் எனது உடைமை என்றும் பொருள்படுகிறது.

அப்பொழுது எனது உடல் என்று உடலை உடைமையாக்கக் கூடிய அந்த நான் யார்? என்ற கேள்வி எழுப்பும் போது இந்த உடல் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான ஆற்றல் அறிவு என்னும் தன்மையுடன் கூடிய உயிரும் உயிருக்கு மூலமாகவும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச அறிவு என்னும் தன்மையுடைய இறையாற்றலுமே பதிலாக விரிந்து நிற்கிறது.

தியானம் என்கிற வகையில் எந்த ஒன்றிலாவது மனம் குவித்து அந்த ஒன்றின் தோற்றம் வளர்ச்சி இயக்கத்திற்கு மூலமான இறையாற்றல் வரை மனமும் உயிரும் ஊடுருவி அதன் தன்மையாக ஆகுதலே சமாதியாகும்.

இந்த சமாதி நிலையை அடைவதற்கு ராஜயோகத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல சமாதி என்ற இலக்கை அடைய இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம் ஆகிய நான்கும் மிகவும் முக்கியமானதாகும்.(இதை நீங்கள் தவம் 1, தவம் 2 ஆகிய பகுதிகளில் காணலாம்)

மிகவும் உன்னதமான கலையான யோகக் கலையைப் பயின்று நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களைச் சார்ந்த சமுதாயமும் நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

.


Thursday, March 31, 2011

மதம் கடந்த நேசம்



மதுரை எம்.கே.புரத்தில் முனியாண்டி கோயில் கட்டுவதற்காக ரூ.3 லட்சம் மதிப்புள்ள, 200 சதுர அடி இடத்தை தானமாக வழங்கி இந்து - முஸ்லிம் ஒற்றுமைக்கு வலுசேர்த்திருக்கிறார் மகபூப்பாஷா(40). இப்பகுதியைச் சேர்ந்த இவர், பீரோ தயாரிப்பு கம்பெனி நடத்துகிறார். ஐம்பது ஆண்டுகளுக்கு முன், இந்துக்கள் செல்வதற்காக தனது இடத்தை தானமாக வழங்கி அப்போதே ஒற்றுமையை வெளிப்படுத்திஇருக்கிறார் இவரது தாத்தா நீருஉசேன். இவருக்கு சொந்தமான இடத்தில், சிலர் முனியாண்டி கோயிலை சிறியதாக கட்டினர். இக்கோயிலை விரிவுப்படுத்த திட்டமிட்ட நிர்வாகிகள் இடத்தை விலைக்கு வாங்க முடிவு செய்து மகபூப்பாஷாவை அணுகினர். அவர் "மதங்கள் வேறாக இருந்தாலும், சகோதரர்களாக வாழ்ந்து வருகிறோம். கோயிலுக்கு இடத்தை தானமாக வழங்கினால் தான் சரியாக இருக்கும்' என்றார். இதை தொடர்ந்து, நேற்று மதியம் அரசரடி சார்பதிவாளர் அலுவலகத்தில், கோயில் நிர்வாகிகள் தங்கச்சாமி, கருப்பையா, ராஜூ ஆகியோருக்கு தானசெட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்து கொடுத்தார். அவரிடம் கேட்டபோது, "இதெல்லாம் பெரிய விஷயமே இல்லை சார்' என்று நம்மை நெகிழ வைத்தார்.

நன்றி :  தினமலர் நாளிதழ்


விவேகானந்தரின் கனவு





சிகாகோ சர்வமத சபையில் உலகப்புகழ் வாய்ந்த
சொற்பொழிவாற்றிய 8வது நாள் 19-09-1983
அன்று விவேகானந்தர் எதிர்காலத்தில்
மதம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும்
என தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி
-யிருக்கிறார். அந்தக் கருத்துகளை அப்படியே
தன்னுள் கொண்டு திகழ்கிறது, மகான் வேதாத்திரி
மகரிசியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உலக பொது
அருள் நெறி சமயம்.


விவேகானந்தர் அன்று பேசி கருத்துக்கள்.-

என்றாவது உலகம் தழுவிய மதம் (UNIVERSAL
RELEGION)   என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது
இடத்தாலும் காலத்தாலும் எல்லைப்படுத்தப்
படாததாக இருக்க வேண்டும், அந்த மதம்
யாரைப்பற்றி பிரச்சாரம் செய்கிறதோ,
அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக
இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை
எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று
அது கிருஸ்ண பக்தர்கள், கிருஸ்து பக்தர்கள்,
ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாக
எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ
பெளத்த மதமாகவோ, கிருஸ்தவ மதமாகவோ,
முகமதிய மதமாகவோ இருக்காமல் இவற்றின்
ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும்
வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக
இருக்க வேண்டும். காட்டுமிராண்டி முதல்
ஞானியர் வரை எல்லோருக்கும் இடமளித்து
தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும்
தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மை
உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில்
பிற மதத்தினரை மதித்தி நடக்கும்
பாங்கு இருக்கும். ஆண், பெண் இருபாலரிடமும்
தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும்
மனித இனம் தன் உண்மையான தெய்வீகத்
தன்மையை உணர்வதற்கு உதவி
செய்வதே அதன் நோக்கமாக இருக்கும்.
அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

விவேகானந்தரின் மேற்கண்ட கனவுகளோடு
தனிமனித ஒழுக்கம் குடும்ப அமைதி
சமுதாய மேன்மை உலக அமைதி ஆகியவற்றையும்
தனது கொள்கையாகக் கொண்டு இயங்கிவரும்
உலக பொது அருள்நெறி சமயம் என்பது
உலக மக்கள் அனைவரையும் மேம்படுத்தவல்லது.
மகான் வேதாத்திரி மகரிசியால் தோற்றுவிக்கப்பட்ட
உலக சமாதான இயக்கம் இதை செயல்படுத்தி
வருகிறது.
.
.
.
 







Friday, February 4, 2011

நல்லது நடக்க ஒரு மந்திரம்


எந்த ஒரு நல்ல செயல் நடக்க வேண்டுமானாலும் அதற்கு
முதலில் நல்ல எண்ணம் வேண்டும். நமது வாழ்விலே
நல்லது நடக்க வேண்டுமானால் அதற்கு முதலில்
நமது உள்ளம் தூய்மையாகி நல்ல எண்ணமும்
பரந்த மனப்பான்மையும் உடையதாகவும்
எல்லோருக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதாகவும்
இருக்க வேண்டும்.

எண்ணம் குறித்த அறிஞர்களின் கருத்து.

டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி-
நானும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து விட்டேன்.
வாழ்க்கை என்பது நல்லெண்ணம் தவிர
வேறொன்றும் இல்லை.

சுவாமி சின்மயானந்தா-
ஒருவனிடமிருந்து வெளிச்செல்லும் எண்ணம்
நூறு மடங்கு வலுவுடன் மீண்டும் அவனிடமே
வந்து சேருகிறது.

பழமொழிகள்
1. உள்ளத்தனையது உயர்வு
2. வினை விதைத்தவன் வினையறுப்பான்
3. எண்ணம் போல் வாழ்வு
4. தீதும் நன்றும்  பிறர் தர வாரா.

ஆக இந்தக் கருத்துகள் அனைத்தும்  நமக்கு தெரிவிப்பது
ஒன்றுதான். நமது மனம் தூய்மையுடையதாக
உயர்ந்த, பரந்த எண்ணம் உடையதாக
இருந்தால் நமது வாழ்க்கை உயர்வடையும்.

அதற்கான எளிய சிறந்த வழி ஒன்று
உள்ளது. நீங்கள் தினமும் காலையில்
விழிக்கும் போதும், இரவு உறங்கும்
முன்பும் கீழ்கண்ட வாசகங்களை மனதில்
தியானித்துக் கொள்ளுங்கள்.
விரைவில் உங்கள் உள்ளம் தூய்மையடைந்து
உங்கள் வாழ்வில் உயர்வடைவதை
உணர்வீர்கள்.

அன்னைக்கு வணக்கம்
தந்தைக்கு வணக்கம்
குருவுக்கு வணக்கம் 
எங்கும் நிறைந்து எல்லாவுமாய்  இருக்கும்
இறைப்பேராற்றலுக்கு வணக்கம்


"தூய உலக கூட்டாட்சி
போரில்லா அன்புலகம்
உலக மக்கள் சுபிட்சம்" - என்ற கருத்து
எல்லோர் உயிரிலும் ஊடுருவி
எண்ணமாய்,  செயலாய் மலரட்டும்.


அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
வாழ்க வையகம் . வாழ்க வளமுடன்.


குறிப்பு : இதை உங்கள் படுக்கை அறையில்
ஒட்டி வைத்துக்கொண்டால்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வாழ்க வளமுடன். 

.
.

Tuesday, January 11, 2011

உலக நலம்



போர் என்பது மனிதர்களை மனிதர்கள் கொன்று குவிக்கும் படுபாதகமன்றி
வேறல்ல. மக்களின் அறியாமையாலும் உலகளாவிய பார்வையின்மையாலும் கொலைகாரர்கள் வெற்றி பெற்றவர்களாகவும் கொலையுண்டவர்கள் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படுகிறது.

பழங்கால மன்னர்களின் வீரம் பிரஸ்தாபிக்கப்பட்டாலும், வெற்றி பெற்றவர்கள் உலகளாவிய அன்பும் கருணையும் கொண்ட
புத்தர், காந்தி, ஏசு போன்றவர்களேயன்றி பல்லாயிரம்
கொலைகளுக்குக் காரணமான மன்னர்களல்ல.

சித்தார்த்தன் என்ற இளவரசன் புத்தனானதால்தான் இன்றும் மக்கள்
மனதில் நீங்கா இடம்பெற்று இருக்கிறார். 

கலிங்கத்துப் போரிலே தன்னால் செய்யப்பட்ட படுபாதகத்தைக்
கண்டு தானே பதபதைத்து இனிமேல் போர்புரிய மாட்டேன்
என்று அசோகர் புத்த மதத்தைத்  தழுவினார். அதுவே புத்தர்
போன்ற அருளாளர்கள் வெற்றிகரமான வாழ்க்கை
வாழ்ந்ததற்கான முகாந்திரம் ஆகும்.

இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் போதுமான
அளவு வளம் நிறைந்தே உள்ளது. அதை பங்கீடு செய்வதில்
மனிதனின் பேராசையால் ஏற்றத்தாழ்வும் வறுமையும்
அறியாமையும் மேலோங்கி நிற்கிறது. இதனாலே போரிடும்
விலங்கின் மனோபாவம் மேலிடுகிறது.


யாரேனும் தன் மொத்த வருமானத்தில் சரிபாதிக்கு ஆயுதங்கள்
வாங்கி வீட்டிலே வைத்துக் கொள்வார்களா? அவ்வாறு
வாங்கிவைத்துக் கொண்டால் அவரைச் சார்ந்தவர்கள்
நிம்மதியாக வாழமுடியுமா? அப்படிச் செய்தால் சமுதாயத்தில்
அமைதி நிலவுமா ? அவர் வாழ்வில் வளமும் நலமும் பெருக
முடியுமா? குறைந்த பட்சம் அவரை மனிதராக ஏற்றுக் கொள்ள
முடியுமா? அவரை சமுதாயக் குற்றவாளியாகத்தானே பார்க்க
முடியும்.

ஆம் என்றால் இன்றைய தேதிக்கு இந்த உலக மக்கள் அனைவருமே
குற்றவாளிகள்தான். ஆம் உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே தனது
வருமானத்தில் சரிபாதிக்கு மேல் இராணுவத்துக்கும் இராணுவ
தளவாடங்களும் செலவிடுகிறது.



இராணுவத்துக்கென ஆண்டொன்றுக்கு உலகம் முழுவதும் ஏழுகோடி
ட்ரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறதாம். உலகம் முழுவதும்
சுபிட்சமாக வாழ இதில் பத்தில் ஒரு மடங்கு தொகையே போதும்
என்கிறார்கள்.



போர் வருவதற்கான முகாந்திரம் என்ன? ஒருவர் பொருளை, இடத்தை,
உடைமையை மற்றவர் கவர்ந்து செல்வார் என்ற பயம்தானே. ஆனால்
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்வதைவிட அதிகமான
தொகையை பயத்திற்காக மட்டுமே ஒதுக்குவது அறிவுடைய
செயலாகுமா?  ஆனால் நிச்சயம் இந்த நிலை மாறித்தான் ஆக
வேண்டும்.


உலக மக்கள் அனைவரிடத்திலும் இது குறித்த விழிப்புணர்வு
வேண்டும். அதற்கு மக்களின் மனதில் மாற்றம் வேண்டும்.
அதை யார் ஏற்படுத்துவது? புத்தர், காந்தி, வள்ளலார், வேதாத்திரி
மகரிசி போன்ற மகான்கள் தோன்றிய இந்த புண்ணிய
பூமியிலிருந்துதான் அது துளிர்விட வேண்டும்.



.

Thursday, September 30, 2010

அயோத்தி தீர்ப்பு

நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்று சந்தேகமாக
இருக்கிறது. கடவுள் என்பது என்ன? என்பதிலேயே இன்னும்
குழப்பங்களோடே இருக்கிறோம். மதத்தைப் பற்றிய தெளிவும்
இல்லாமல் இருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே
விவேகானந்தர் நதிகள் எங்கெங்கு தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரேகடலைச் சென்று அடைவதைப் போல் எங்கெங்கோ
எந்தெந்தப் பெயராலோ மதங்கள் தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரே இறைவன் என்ற எல்லையற்ற எங்கும் நிறைந்த பேராற்றலை
அடைவதற்கான வழிகளே என்று உலகம் முழுவதற்கும் மதம்
பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக்கியுள்ளார். இன்றளவும்
இதைபற்றிய தெளிவுக்கு நாம் வராமல் இருப்பது அறியாமையின்
இருளிலே நாம் தெரிந்தே வீழ்ந்து கிடக்கிறோம்.


ஒரு காலத்தில் இந்து மதத்திலேயே சைவசமயத்தவரும்
வைணவ சமயத்தவரும் தத்தமது வழிபாடே உயர்வானது
என்று பெரும் மோதல்கள் நடந்துள்ளது. (கமலின் தசாவதாரத்தின்
துவக்க காட்சி நினைவு கூர்க,) ஆனால் இன்று ஒரே வளாகங்களில்
சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் கட்டப்படுகிறது.
சிவனையும் பெருமாளையும் எல்லா மக்களும்தான் வணங்குகின்றனர்.
அறியாமையால்தான் அக்காலத்து மக்கள் கருத்து வேறுபாடு
கொண்டு பெரும் துண்பத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதைவிட மேலாக சபரிமலையின் எருமேலியில் சாஸ்தாவின்
தோழரான வாபரின் மசூதிக்கு அனைத்து ஐயப்பன்மார்களும்
சென்று வாபரை வழிபடுகின்றனர். அங்கே இந்துக்களும்
இஸ்லாமியர்களும் சகோதர வாஞ்சையுடன் பழகுகின்றனர்.
ஐயப்பனுக்கு வாபர் தோழரான போது இராமனுக்கு பாபர்தோழராக
இருக்கமாட்டாரா? இல்லை இந்த விசயம்தான் இந்து மக்களுக்கும்
இஸ்லாமிய மக்களுக்கும் புரியாதா?

வேலாங்கன்னி மேரிமாதா கோவிலுக்கு போகாத இந்துவோ
இஸ்லாமியரோ உண்டா? நாகூர் தர்க்காவுக்கு
போகாத இந்துவோ கிறிஸ்துவரோ உண்டா?


எங்கும் நிறைந்த பேராற்றலின் இயல்பு இயல் (இயற்பியல்)
காரணமாகவே. இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும் அதற்கு
கடவுள் என்றோ  வேறு என்ன பெயர் வேண்டுமானாலும்
கொடுத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்டீபன் ஹவ்கின்ஸ்
என்ற அறிவியல் அறிஞர் கூறுகிறார். இதையே சுத்த
வெளியின் தன்னழுத்தச் சூழ்ந்தலுத்தும் ஆற்றல்
என்று வேதாத்திரி மகரிசி பகர்கிறார்.

எங்கும் நிறைந்த பேராற்றலைத்தான்
சிலர் ராம் என்கிறோம் சிலர் ரஹிம் என்கிறோம்
சிலர் மாரியம்மன் என்கிறோம் சிலர் மேரிமாதா என்கிறோம்
சிலர் கிறிஸ்து என்கிறோம் சிலர் கிருஸ்ணன் என்கிறோம்

ஒரே வளாகங்களில் சிவனுக்கும் பெருமாளுக்கும் கோவில்
கட்டுவது போல் ஒரே வளாகங்களில் இராமனுக்கும் அல்லாவுக்கும்
கோவில்கட்டி எல்லா மக்களும் சேர்ந்தே வணங்கக் கூடிய அளவு
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இதற்கிடையில்
யாரோ குளிர்க்காயவதற்காக காலம் தள்ளிப்போகிறது.


ஹரித்துவாரில் அமைதிப் பேரணி நடத்திய இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள்.


.

Sunday, September 19, 2010

ஸ்பைரூலினா என்றொரு அற்புதம்

 

ஸ்பைரூலினா என்பது ஒருவகை பாசி. ஸ்பைரூலினா
உலகில் உள்ள தாவர உணவிலேயே மிகவும் சக்தி
அதிகம் உள்ளது . ஆய்வாளர்கள் ஒரு கிராம்
ஸ்பைரூலினாவில் ஒரு கிலோ பழத்தில் உள்ள
சக்திக்கு இணையான சக்தி உள்ளது என்கின்றனர்.
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திலும் சென்னையில்
சில இடங்களிலும், சென்னை கால்நடை பல்கலை-
கழகத்திலும் இதை வளர்த்து வருகின்றனர்.
இது நல்ல சத்தான உணவாக மட்டுமன்றி
நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
இதை மாத்திரைகளாகவும்,  எலுமச்சையுடன் சேர்த்து
குளிர்பானமாகவும், பலகாரங்களிலும் சேர்த்து
உண்ணலாம்.

இதைப்பற்றிய மேலும் விபரங்கள் கீழே
 
Typical Analysis

items in percentage
protein 60-63%     
(3 times higher than beef, fish or pork . 6 times higher than eggs. 2 times higher than soy beans)

minerals 7-13%
(including Calcium, Potassium, Magnesium, Zinc, Phosphorus)

fibre 8-10%
(4 times higher than flour or corn)

vitamin B12 0.2-0.3mg
( 3~4 time higher than animal liver)

beta carotene 140-330mg
(5 time higher than carrots, 40 times higher than Spinach)

carbohydrate 15-25%
lipid 6-8 %

chlorophyll 1000-2000mg
(more than 20 times higher than wheat grass)

calcium 130mg
(10 times higher than milk)

iron 33mg
(65 times higher than spinach, 30 times higher than beef, 5 times higher than soy bean)


Contents of Spirulina


* Predigested proteins

* amino acids

* chlorophyll

* essential fatty acids

* gamma-linolenic acid (GLA)

* Vitamin A

* Beta-Carotene

* Vitamin E

* Vitamin B complex, notably Vitamin B 12


To be useful in the Treatment of:


* Diabetes

* Glaucoma

* Liver pathologies

* Cancer

* Increasing neurotransmitter formation

* Acting as an appetite suppressant

* Hair loss

(குறிப்பு : சில விபரங்கள் பிற தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டது)
மேலும் இது குறித்த விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
வி.என்.தங்கமணி 
Cell No.:  9750724615   
Email:   n_thangamani@yahoo.com 

ஸ்பைரூலினா  மாத்திரைகள் மற்றும் பொடி வேண்டுவோர்
தொடர்புகொள்ள :
ரத்தினராஜசிங்கம் :  சென்னை . http://www.oferr.org/content.php?id=179
செல் நெம்பர் : 9884000413  
 
  
 
.

Sunday, April 11, 2010

தவம் - VI

குரு வேதாத்திரி மகான் அவர்களை உள்ளத்தில் நினைந்து வணங்கித் தொடங்குகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு யோக நண்பர்களுக்கு வணக்கம்!

தவத்தில் ஆசனம், பிரணாயாமம், இயமம், நியமம் ஆகியவை குறித்து பார்த்தோம். இங்குபிரத்தயாகாரம் மற்றும் தாரணை குறித்து பார்ப்போம்.

பிரத்யாகாரம்

நம் மனம் புறப்பொருள்களை நோக்கி ஓடுவதைத் தடுத்தல் பிரத்யாகாரம் எனப்படுகிறது.நாம் உயிர் உட்பொருள். உயிரில் உள்ள பதிவுகளுக் கேற்ப மனம் அலையாக உண்டாகிறது. மனம் நமது தோல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காதுகள் வழியாக அழுத்தம், சுவை, மணம், ஒளி மற்றும் ஒலியாக புறப்பொருள்களை நோக்கி ஓடி ஓடி நமது உயிர்ச் சக்தியை வீணாக்குகிறது. இவ்வாறான மன ஓட்டத்தைத் தடுத்தலே பிரத்யாகாரம் எனப்படுகிறது.

தாரணை
தாரணை என்பது புறத்தே ஓடும் மனதை தடுத்த பின் ஓரிடத்தில் குவித்தலே தாரணை ஆகும். புறத்தே விரிந்து ஓடும் மனதை தடுத்து நமது உடலில் இதயம், உச்சந்தலை, நெற்றி புருவ மத்தி ஆகிய ஏதேனும் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு மலர், ஒரு இலை போன்ற ஒரு பொருளிலோ குவித்தல் தாரணை ஆகும்.

உதாரணத்திற்கு சிதறி ஓடும் சூரிய ஒளிக்கு சக்தி குறைவு, இதையே ஒரு குவிஆடி மூலம்குவிக்கும் போது தீப்பிடிக்குமளவு ஆற்றல் உண்டாகிறது. அது போலவே பலவற்றை நோக்கிசிதறி ஓடும் மனத்தை தடுத்து ஒன்றில் குவிக்கும் போது அபரிமிதமான ஆற்றல் உண்டாகிறது.

தவத்தை நோக்கிய பாதையில் ஆசனம், பிரணாயாமம் ஆகியவை முதல்படி பிரத்தயாகாரம் மற்றும் தாரணை என்பது இரண்டாம் படி ஆகும். இந்தப் பாதையில் பயணிக்க ஏதுவான சூழிநிலையை உருவாக்குவதே இயமம், நியமம் ஆகும். தியானம், சமாதி ஆகியவைமூன்றாவது படியாகும் அது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே.


நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும் இறை அருளால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்.

Monday, April 5, 2010

உங்கள் பணத்தை சொத்தாக்கி உலகுக்கு உதவுங்கள்


உங்கள் பணத்தை யாருக்கும் தானம் செய்யாமல், பணம் பன்மடங்காகப் பெருகும் விதத்திலான சொத்தாக்குவதன் மூலம் இந்த உலகுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேவையைச் செய்ய முடியும்.

கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

உதாரணத்திற்கு
ஈரோடு மாவட்டம், பவானி தாலூக்கா, அந்தியூர் பகுதிகளின் கிராமத்தில் 1990 களில் ஏக்கர் 70 ஆயிரத்திற்கு விற்ற தண்ணீர் பாயும் பூமி 20 ஆண்டுகளில் 7 லட்சமாக விற்கிறது. இருபது ஆண்டுகளில் 10 மடங்கு விலையேற்றம் ஆகியிருக்கிறது. தற்பொழுது கட்டுமானப் பணிக்காக மரங்களின் தேவை நாளுக்கு நாள் விலையேறிக்கொண்டேயிருக்கிறது.

எனவே கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

நீங்கள் நகரத்திலோ, வெளி நாட்டிலோ வசிப்பவரா ? நல்ல வேலையிலிருப்பவர் அல்லது நல்ல தொழில் நடத்துபவரா? இந்திய கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி மரம் வளருங்கள். இந்தியா வளர்ச்சியடைந்து வருவதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. கட்டுமான பணிக்காக மரங்களின் தேவையும் கூடிக் கொண்டே இருக்கிறது. எனவே உங்கள் முதலீட்டுக்கு நல்ல மதிப்பேற்றமும் உண்டாகிறது. உலகுக்கு உதவவும் முடிகிறது.

சுமார் 1000 ஏக்கர் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு
 100 ஏக்கர் மரம் வளர்ப்பதன் மூலம் நல்ல சுற்றுச் சூழல்,
மழை வளம், நில வளம், நிலத்தடி நீர் மிக்க வளமான
கிராமத்தை உருவாக்க முடியும்

விவசாய வருமானத்திற்கு வருமான வரி இல்லை
என்பது மேலும் மகிழ்ச்சியான விசயமாகும்.

ஒரு 10 ஏக்கர் மரம் வளர்பிற்கான திட்ட மதிப்பீடு.

முதலீட்டுச் செலவினங்கள் (76 லட்சம்)
ஒரு 10 ஏக்கர் தோட்டத்தின் விலை 70 லட்சம்
சொட்டு நீர்அமைக்க 4 லட்சம்
வேலி அமைக்க 2 லட்சம்

நடப்புச் செலவினங்கள் ( 3 லட்சம் 57 ஆயிரம் )
மரக்கன்றுகள்- 3870 ( 9 ஏக்கர்) 40 ஆயிரம்
தென்னை -60 கன்றுகள் (ஒரு ஏக்கர்) 2 ஆயிரம்
நடு கூலி 50 ஆயிரம்
உரம் மருந்து 15 ஆயிரம்
** நீர் பாய்ச்ச, காவல் சம்பளம் 50 ஆயிரம் X 5 ஆண்டுக்கு =2 லட்சம் - 50 ஆயிரம்
(**5 ஆண்டுகளில் பலன் தரக்கூடிய ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் மூலம் நடப்புச் செலவினத்தை 5 ஆண்டுகளுக்கு பின் அந்த வருமானத்தில் ஈடுகட்டிக் கொள்ளலாம்)

வருமானம்
12 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ10,000 வீதம் 1 கோடி 85 லட்சம்
20 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ20,000 வீதம் 3 கோடி 70 லட்சம்
                                170 மரங்கள் பழுது மற்றும் சேதாரம்
          மொத்தம் 3870 மரங்கள் மூலம் 5 கோடி 55 லட்சம்
(ஒரு ஏக்கர் தென்னை மூலம் வரும் வருமானம் நடப்பு செலவினமான நீர்
பாய்ச்சுதல், காவல் ஆகிய வற்றிற்கு உபயோகிக்க வேண்டி வருமான
கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை)

சொத்து மதிப்பு
நிலத்தின் மதிப்பு குறைந்தது 20 ஆண்டுகளில் 10 மடங்கு ஏறக்கூடும்

சேவை மதிப்பு
20 ஆண்டுகளில் 250 டன் காய்ந்த இலைகள் மூலம் மண் வளம் பெறுகிறது,
இதனால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராகிறது, அதிக அளவிலான
கரியமில வாயு பிராணவாயுவாக்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல்
குறைகிறது. மழையளவு கூடுகிறது.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்
n_thangamani@yahoo.com

நிலம் வாங்குதல், மரக்கன்று வாங்குதல், ஆட்கள் நியமித்தல் மேற்பார்வையாளர் நியமித்தல் தொடர்ந்த கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு உதவத்தயாராக இருக்கிறோம்.

மரம் வளர்த்தல் தொடர்பான தளங்கள்
௧.   மரங்களை வளப்போம்

Friday, March 5, 2010

நித்யானந்தாவும் சமுதாய கூத்தும்


உலகையே அல்லோலப் படுத்தும் இந்த விசயத்தை ஆராய அடிப்படையான இரண்டு விசயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அவை
1. இயற்கை நியதி
2. மக்களின் பிரதிபலிப்பு

1. இயற்கை நியதி
உலகத்தில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவேண்டுமானால் கூடல் அவசியம், இந்த நியதி ஒவ்வொரு உயிரின் உயிரோடு கலந்த விசயம். இதிலிருந்து விலகும் உயிர்களை இழுத்து இதிலே வீழ்த்த இயற்கை எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும். இயற்கைக்கு முரணாக வாழ்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் வீழலாம்.

வேதங்களில் மனித வாழ்வை பிரமச்சர்யம், கிரகஸ்தன், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என நான்கு பாகங்களாக பிரித்து வாழச்சொல்கிறது. கற்கும் காலத்தில் உயிரணுக்களை விரயம் செய்தால் அறிவு வளர்ச்சி தடைப்படும் என பிரமச்சர்ய விரதம் கடைபிடிக்கச் சொல்கிறது. கற்றபின் சம்பாதிக்கும் போது மனித இனம் அழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு தனக்கென ஒரு குடும்பம் குழந்தை என சந்ததியை வளர்த்து கிரகஸ்தனாகச் சொல்கிறது. குடும்பக் கடமைகள் முடியும் தருவாயில் உயர்ஞான நெறிகளைத் தேடுவதை வானப்பிரஸ்தம் என்கிறது. ஞானத்தின் வெளிப்பாடாக தன் மக்கள் தன் குடும்பம் என்ற சுயநலத்தைத் தாண்டி எல்லா மக்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் வாழ்வதை துறவு என்கிறது.

இதை விடுத்து இளமையிலே துறவு என்பது வேத வாழ்வுக்கும் முரணாகிறது. இளமையிலே துறவு பூண்டு, யோகம் தவம் செய்து உயர்வாழ்வு வாழ்ந்தாலும் சூழல் வரும் போது இயற்கை ஆற்றல் மண்ணைக் கவ்வ வைப்பதிலிருந்து தப்புதல் கடினம்.


2. மக்களின் பிரதிபலிப்பு
யோக வாழ்வு என்பது உடலையும் மனதையும் திறம்பட பேணும் ஓர் அறிவியல்.ஒருவர் யோக வாழ்வு வாழ்ந்தால் அவருக்கு நல்லது. அவருடைய உடலும் மனமும் திறம்படும், நலன் பெறும்.நாம் நலம் பெற வேண்டுமானால் நாமும் யோக வாழ்வு வாழலாம் அதை விடுத்து அவரை தலையில் வைத்து யார் கொண்டாடச் சொன்னார்கள்? காலில் பாலூற்றி யார் கழுவச் சொன்னார்கள்? காரணம் சுயநலம். அவரைக் கொண்டாடினால் சொத்தும் சுகமும் பெருகும் என்ற மூடத்தனம். அளவுகடந்த சுயநலம் அறிவுக்கண்ணை மறைக்கிறது. பிறரை தலையில் வைத்துக் கொண்டாடுவது அல்லது தரையில் போட்டு மிதிப்பது இதைத்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம். நம்மை நாம் என்றாவது கொண்டாடியிருக்கிறோமா? நமது நல்ல தன்மைகளை இனங்கண்டு வளர்த்திருக்கிறோமா ? அந்த விசயத்தை ஊடகங்கள் திரும்பத்திரும்ப காண்பிக்க காரணம் என்ன ? மக்கள் அவ்வாறான நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்பதாலேயே ஊடகங்கள் திரும்பத்திரும்பக் காண்பிக்கின்றன. அவ்வாறான நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிப்பதாக இருந்தால் எந்த ஊடகங்களும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. நமது சமுதாயத்தின் தரம் அந்த அளவில்தான் இருக்கிறது. எங்கோ மறைவிடத்தில் நடந்த தலைகுனிவுக்கான சமாச்சாரத்தை பொழுதெல்லாம் வெளிச்சம் போட்டு இளைஞர்களின் மனதில் விசத்தை பாய்ச்சுமாறு செய்வதற்கும் நாமே காரணம். மூட நம்பிக்கையிலும் சுயநலத்திலும் மூழ்கிக்கிடக்கும் நமது சமுதாயத்தில் இது போன்ற செயல்களுக்கு மக்களின் அறியாமையே முழு முதற்காரணம்.

Monday, February 8, 2010

இது என்ன ?


இது என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

நிறைய நிலாக்களா ?

ஒரு துருப்பு : இது சூரிய கிரகணத்தோடு சம்பந்தபட்டது .


ரொம்ப யோசிக்க வேண்டாம்.


மேலே படியுங்கள்.

ஒன்றுமில்லை

கிரகண நாளில்

கிடந்தது வாசலில்

நூறுநிலா பிறைகள்.

எப்போதும் முழுவட்டம்

இப்போது பிறை நிலவாய் !

கிளுக்கி வைத்தேன்

பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று.

கிரகணம் காண

கருவியொன்றும் வேண்டாம்.

பந்தல் வாசல்

வெயில் காட்டும்.

பளிச்சென்று .....