Sunday, February 26, 2012

கவிதை நூல்



எனது வாழ்வை நெறிப்படுத்திய சின்னச் சின்ன
விடயங்களைத் தொகுத்து மனமே விழித்திடு
என்னும் கவிதை நூலாக வெளியிட்டுள்ளேன்.
இந்த நூல் உங்கள் வாழ்வில் எங்கோ ஒரு சிறு
ஒளியை ஏற்படுத்தக்கூடும் என நம்புகிறேன்.



மனமே விழித்திடு என்னும் இக் கவிதை நூல்
கடந்த 17.02.2012 வெள்ளியன்று வெளியிடப்பட்டது.
திரு மரபின் மைந்தன் முத்தையா அவர்கள் நூலை வெளியிட
சக்தி தொழில் நுட்பக் கல்லூரியின் முதல்வர்
திரு. என். உருத்திரேந்திரபாலன் அவர்கள் பெற்றுக்கொண்டார்.
கள்ளிப்பட்டி தமிழியல் ஆய்வு அறக்கட்டளையின்
தலைவர் திரு.பூந்துறையன் அவர்களின் உறுதுணையுடன்
கோபி சிவமுருகன் அவர்களின் வடிவமைப்பில்
உருவான இந்நூல் ஈரோடு பாரதி புத்தகாலயத்தில்
விற்பனைக்குக் கிடைக்கும். விலை உரூ30.மட்டும்.

வாழ்க வளமுடன்.

.