Sunday, September 18, 2011

முதுகு வலிக்குத் தீர்வு


இன்று பலரை துண்பத்திற்கு ஆளாக்கிக் கொண்டிருக்கும் ஒரு நோய் (Back Pain) என்று சொல்லப்படும் முதுகுவலி. இந்த வலிக்கான காரணமாகக் கூறப்படும் எலும்பு தேய்மானம் ஜவ்வு தேய்மானம் என்பது பெரும்பாலும் உண்மையான காரணமல்ல. பெரும்பாலான முதுகுவலிக்கு காரணம் வாயு (Gas) ஆகும். உங்களுக்கு வலி ஒரே இடத்தில் அல்லாமல் ஒரு சில நாட்களில் சற்று இடம் மாறி வலித்தால் அதற்கு காரணம் வாயுவேதான்.

அதிகமாக உண்பதால் ஜிரணித்தது போக மீதமுள்ள உணவு குடலில் புளித்துப் போய் ஒருவித வாயு உண்டாகிறது. இந்த வாயு ஏப்பமாக, கொட்டாவியாக, அபானவாயுவாக வெளியேறாவிட்டால் உயிராற்றல் பரவக்கூடிய நாடிகளில் நுழைந்து ஆற்றல் பரவுவதில் ஒரு தடை ஏற்படுகிறது. அந்த தடையே வலியாக உணரப்படுகிறது. இந்த வாயு நாடிகளில் நகர்ந்து இடம் மாறும் வாய்ப்பு உள்ளதால் வலியும் இடம் மாறுகிறது.

இந்த வலியை தவிர்க்க ஐந்து விக்ஷயங்களில் நாம் கவனம் செலுத்த வேண்டும்.
1. உணவு
இன்னும் இரண்டு கை சாப்பிட்டால் போதும் என்கிற போதே சாப்பிடுவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். வயிறு நிரம்ப சாப்பிடக் கூடாது. பசி வந்த பின் மட்டுமே சாப்பிட வேண்டும்.சாப்பாட்டை வாயில் போட்டதும் வெளிக்காற்று வாயில் புகாதவாறு உதடுகளை மூடிக்கொண்டு நன்றாக மென்று விழுங்க வேண்டும். சம்மணம் போட்டு அமர்ந்து சாப்பிட வேண்டும். உண்ணும்போது இடையில் அதிகமாக தண்ணீர் குடிக்கக்கூடாது.

2. படுக்கை
பஞ்சு போன்ற மெத்தைகளைத் தவிர்க்கவும். கயிற்றுக் கட்டிலானால் கயிறு தொங்கலாக இருப்பதைத் தவிர்க்கவும். தரையில் பாய் விரித்து தலையணை வைத்துப்படுப்பது நலம். நாம் புரண்டு படுக்கும் போது வயிற்றுக்கு ஓரளவு அழுத்தம் கிடைக்க வேண்டும். அதனால் வாயு ஏப்பமாக அபான வாயுவாக வெளியேறிவிடும்.

3. எண்ணெய் குளியல்
வருடத்திற்கு நான்கு முறையாவது எண்ணெய் தேய்த்து குளிக்க வேண்டும். தினமும் தலைக்கு எண்ணெய் தேய்க்க வேண்டும். இதனால் முட்டு எலும்புகளில் உள்ள ஜவ்வுகளுக்கு போதுமான அளவு உராய்வுத் தன்மையைத் தாங்கக்கூடிய வளவளப்புத் தன்மை கிடைக்கும். ஜவ்வு தேய்வதில்லை, வரட்சித் தன்மையாலேயே வலி உண்டாகிறது.

4. உடற்பயிற்சி
வேதாதத்ரிய யோகத்தில் படுத்துக் கொண்டு செய்யக்கூடிய மகராசனப் பயிற்சியும் சூரிய நமஸ்காரப் பயிற்சியும் செய்தால் முதுகுவலி மூட்டு வலி நீங்கும்.

5. உட்க்காரும் பொழுது எப்பொழுதும் நிமிர்ந்து உட்க்கார வேண்டும். வாரத்தில் இரண்டு நாள் மாலை 3 மணி முதல் ஐந்து மணிக்குள் ஒரு இருபது நிமிடம் முதுகில் வெயில் படுமாறு நிற்பது நலம். தினமும் மிதமான வெந்நீரில் குளிக்க வேண்டும்.

  உடலிலிருந்து பலகோடி செல்கள் உதிர்வது போலவே பல கோடி செல்கள் உற்பத்தியும் ஆகிறது. எனவே எழும்பு, ஜவ்வு தேய்மானம் என்பது இல்லை. அவ்வாறாயின் ஜல்லி உடைக்கும் தொழிலில் உள்ளவர்களின் கைகள் பொழுதெல்லாம் இயங்குவதால் தனித்தனியாகக் கழன்று விடும். ஸ்கேன் செய்து பார்த்து முதுகில் சதைக்கட்டி அல்லது நீர்க்கட்டி இருந்தால் மட்டுமே அறுவை சிகிச்சை செய்யலாம். இல்லையென்றால் மேலே சொன்ன ஐந்தையும் கடைபிடித்து நோய் நீங்கி மகிழ்ச்சியாக வாழலாம்.

வாழ்க வளமுடன்.     
.

Monday, September 12, 2011

தவம்-7 சமாதி


அஸ்டாங்க யோகம் அல்லது ராஜயோகத்தின் இறுதிப்பகுதியாகிய சமாதி என்பதைப் பற்றி பார்ப்போம். ஓரிடத்தில் மனதைக் குவிப்பது தியானம். அதையே நீட்டித்து பயிலுதல் சமாதி என்றாலும் அதைவிட ஆழ்ந்த பொருளுடையது சமாதி. 

இயல்பாக ஒருவர் நான் எனச்சொல்லும் போது தனது உடல் என்றே பொருள் கொள்கிறார். எனது பேனா, எனது சட்டை என்று சொல்லும் போது அந்த பொருட்கள் எனது உடைமை. நான் வேறு அந்த பொருள் வேறு. நான் அந்த பொருள் அல்ல எனப் பொருள்படுகிறது.

அதைப் போலவே எனது கை, எனது கால், எனது உடல் என்று சொல்கிறோம். நான் கை, நான் கால், நான் உடல் என்று சொல்லுவதில்லை. எனவே நான் வேறு எனது உடல் வேறு நான் உடலல்ல என்று பொருள்படுகிறது. உடல் எனது உடைமை என்றும் பொருள்படுகிறது.

அப்பொழுது எனது உடல் என்று உடலை உடைமையாக்கக் கூடிய அந்த நான் யார்? என்ற கேள்வி எழுப்பும் போது இந்த உடல் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான ஆற்றல் அறிவு என்னும் தன்மையுடன் கூடிய உயிரும் உயிருக்கு மூலமாகவும் பிரபஞ்சத் தோற்றத்திற்கும், வளர்ச்சிக்கும், இயக்கத்திற்கும் காரணமான பிரபஞ்ச ஆற்றல் பிரபஞ்ச அறிவு என்னும் தன்மையுடைய இறையாற்றலுமே பதிலாக விரிந்து நிற்கிறது.

தியானம் என்கிற வகையில் எந்த ஒன்றிலாவது மனம் குவித்து அந்த ஒன்றின் தோற்றம் வளர்ச்சி இயக்கத்திற்கு மூலமான இறையாற்றல் வரை மனமும் உயிரும் ஊடுருவி அதன் தன்மையாக ஆகுதலே சமாதியாகும்.

இந்த சமாதி நிலையை அடைவதற்கு ராஜயோகத்தின் அனைத்து அம்சங்களையும் சரியாகக் கடைபிடிக்க வேண்டும். ஒரு கட்டிடத்திற்கு அஸ்திவாரம் எவ்வளவு முக்கியமோ அதேபோல சமாதி என்ற இலக்கை அடைய இயமம், நியமம், ஆசனம், பிரணாயாமம் ஆகிய நான்கும் மிகவும் முக்கியமானதாகும்.(இதை நீங்கள் தவம் 1, தவம் 2 ஆகிய பகுதிகளில் காணலாம்)

மிகவும் உன்னதமான கலையான யோகக் கலையைப் பயின்று நீங்களும் உங்கள் குடும்பமும் உங்களைச் சார்ந்த சமுதாயமும் நலமும் வளமும் பெற்று நல்வாழ்வு வாழ வாழ்த்துகிறேன்.

வாழ்க வளமுடன்.

.