கருவாயிருக்கையில் எனை கனவு கண்டவள். பிறக்காதிருக்குமுன்னே என்மேல் பிரியம் கொண்டவள். என் நோய்க்கு விழித்திருந்து வலி பொறுத்தவள் - என் சாதனையில் சப்தமின்றி கரைதிருப்பவள். சான்றோன் என கேட்க காத்திருப்பவள். தனக்கென வாழாத தகைமை கொண்டவள்.
பச்சை புல்வெளிகள் பரந்துயர்ந்த மரக்கூட்டம் இனியமன மலர் செடிகள் இசைஎளுப்பும் பறவைகளும் தெள்ளியநல் நீரோடை தெவிட்டாத கனிவகைகள் எல்லாவும் சுகம் தரவே இறைவன் படைத்துள்ளான் மனிதர்கள் எப்போதும் மன நிறைவு இல்லாமல் எதையோ தேடி எங்கோ எந்நாளும் ஓடுகிறார் -இவன் V.N.Thangamani