Wednesday, October 14, 2009

இன்பத்தை தேடி

பச்சை புல்வெளிகள்
பரந்துயர்ந்த மரக்கூட்டம்
இனியமன மலர் செடிகள்
இசைஎளுப்பும் பறவைகளும்

தெள்ளியநல் நீரோடை
தெவிட்டாத கனிவகைகள்
எல்லாவும் சுகம் தரவே
இறைவன் படைத்துள்ளான்
மனிதர்கள் எப்போதும்
மன நிறைவு இல்லாமல்
எதையோ தேடி எங்கோ
எந்நாளும் ஓடுகிறார்
-இவன் V.N.Thangamani

No comments: