Friday, February 4, 2011

நல்லது நடக்க ஒரு மந்திரம்


எந்த ஒரு நல்ல செயல் நடக்க வேண்டுமானாலும் அதற்கு
முதலில் நல்ல எண்ணம் வேண்டும். நமது வாழ்விலே
நல்லது நடக்க வேண்டுமானால் அதற்கு முதலில்
நமது உள்ளம் தூய்மையாகி நல்ல எண்ணமும்
பரந்த மனப்பான்மையும் உடையதாகவும்
எல்லோருக்கும் நன்மை விளைவிக்கக் கூடியதாகவும்
இருக்க வேண்டும்.

எண்ணம் குறித்த அறிஞர்களின் கருத்து.

டாக்டர். எம்.எஸ்.உதயமூர்த்தி-
நானும் ஆழ்ந்து ஆழ்ந்து சிந்தித்து விட்டேன்.
வாழ்க்கை என்பது நல்லெண்ணம் தவிர
வேறொன்றும் இல்லை.

சுவாமி சின்மயானந்தா-
ஒருவனிடமிருந்து வெளிச்செல்லும் எண்ணம்
நூறு மடங்கு வலுவுடன் மீண்டும் அவனிடமே
வந்து சேருகிறது.

பழமொழிகள்
1. உள்ளத்தனையது உயர்வு
2. வினை விதைத்தவன் வினையறுப்பான்
3. எண்ணம் போல் வாழ்வு
4. தீதும் நன்றும்  பிறர் தர வாரா.

ஆக இந்தக் கருத்துகள் அனைத்தும்  நமக்கு தெரிவிப்பது
ஒன்றுதான். நமது மனம் தூய்மையுடையதாக
உயர்ந்த, பரந்த எண்ணம் உடையதாக
இருந்தால் நமது வாழ்க்கை உயர்வடையும்.

அதற்கான எளிய சிறந்த வழி ஒன்று
உள்ளது. நீங்கள் தினமும் காலையில்
விழிக்கும் போதும், இரவு உறங்கும்
முன்பும் கீழ்கண்ட வாசகங்களை மனதில்
தியானித்துக் கொள்ளுங்கள்.
விரைவில் உங்கள் உள்ளம் தூய்மையடைந்து
உங்கள் வாழ்வில் உயர்வடைவதை
உணர்வீர்கள்.

அன்னைக்கு வணக்கம்
தந்தைக்கு வணக்கம்
குருவுக்கு வணக்கம் 
எங்கும் நிறைந்து எல்லாவுமாய்  இருக்கும்
இறைப்பேராற்றலுக்கு வணக்கம்


"தூய உலக கூட்டாட்சி
போரில்லா அன்புலகம்
உலக மக்கள் சுபிட்சம்" - என்ற கருத்து
எல்லோர் உயிரிலும் ஊடுருவி
எண்ணமாய்,  செயலாய் மலரட்டும்.


அன்பும் அமைதியும் எங்கும் பரவட்டும்
வளமும் நலமும் எங்கும் பெருகட்டும்.
எல்லா உயிர்களும் இன்புற்று வாழட்டும்.
வாழ்க வையகம் . வாழ்க வளமுடன்.


குறிப்பு : இதை உங்கள் படுக்கை அறையில்
ஒட்டி வைத்துக்கொண்டால்
மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.
நன்றி வாழ்க வளமுடன். 

.
.

Tuesday, January 11, 2011

உலக நலம்



போர் என்பது மனிதர்களை மனிதர்கள் கொன்று குவிக்கும் படுபாதகமன்றி
வேறல்ல. மக்களின் அறியாமையாலும் உலகளாவிய பார்வையின்மையாலும் கொலைகாரர்கள் வெற்றி பெற்றவர்களாகவும் கொலையுண்டவர்கள் தோல்வியடைந்தவர்களாகவும் கருதப்படுகிறது.

பழங்கால மன்னர்களின் வீரம் பிரஸ்தாபிக்கப்பட்டாலும், வெற்றி பெற்றவர்கள் உலகளாவிய அன்பும் கருணையும் கொண்ட
புத்தர், காந்தி, ஏசு போன்றவர்களேயன்றி பல்லாயிரம்
கொலைகளுக்குக் காரணமான மன்னர்களல்ல.

சித்தார்த்தன் என்ற இளவரசன் புத்தனானதால்தான் இன்றும் மக்கள்
மனதில் நீங்கா இடம்பெற்று இருக்கிறார். 

கலிங்கத்துப் போரிலே தன்னால் செய்யப்பட்ட படுபாதகத்தைக்
கண்டு தானே பதபதைத்து இனிமேல் போர்புரிய மாட்டேன்
என்று அசோகர் புத்த மதத்தைத்  தழுவினார். அதுவே புத்தர்
போன்ற அருளாளர்கள் வெற்றிகரமான வாழ்க்கை
வாழ்ந்ததற்கான முகாந்திரம் ஆகும்.

இயற்கையின் படைப்பில் எல்லா உயிர்களுக்கும் போதுமான
அளவு வளம் நிறைந்தே உள்ளது. அதை பங்கீடு செய்வதில்
மனிதனின் பேராசையால் ஏற்றத்தாழ்வும் வறுமையும்
அறியாமையும் மேலோங்கி நிற்கிறது. இதனாலே போரிடும்
விலங்கின் மனோபாவம் மேலிடுகிறது.


யாரேனும் தன் மொத்த வருமானத்தில் சரிபாதிக்கு ஆயுதங்கள்
வாங்கி வீட்டிலே வைத்துக் கொள்வார்களா? அவ்வாறு
வாங்கிவைத்துக் கொண்டால் அவரைச் சார்ந்தவர்கள்
நிம்மதியாக வாழமுடியுமா? அப்படிச் செய்தால் சமுதாயத்தில்
அமைதி நிலவுமா ? அவர் வாழ்வில் வளமும் நலமும் பெருக
முடியுமா? குறைந்த பட்சம் அவரை மனிதராக ஏற்றுக் கொள்ள
முடியுமா? அவரை சமுதாயக் குற்றவாளியாகத்தானே பார்க்க
முடியும்.

ஆம் என்றால் இன்றைய தேதிக்கு இந்த உலக மக்கள் அனைவருமே
குற்றவாளிகள்தான். ஆம் உலகிலுள்ள அனைத்து நாடுகளுமே தனது
வருமானத்தில் சரிபாதிக்கு மேல் இராணுவத்துக்கும் இராணுவ
தளவாடங்களும் செலவிடுகிறது.



இராணுவத்துக்கென ஆண்டொன்றுக்கு உலகம் முழுவதும் ஏழுகோடி
ட்ரில்லியன் டாலர்கள் செலவழிக்கப்படுகிறதாம். உலகம் முழுவதும்
சுபிட்சமாக வாழ இதில் பத்தில் ஒரு மடங்கு தொகையே போதும்
என்கிறார்கள்.



போர் வருவதற்கான முகாந்திரம் என்ன? ஒருவர் பொருளை, இடத்தை,
உடைமையை மற்றவர் கவர்ந்து செல்வார் என்ற பயம்தானே. ஆனால்
எல்லோரும் எல்லாமும் பெற்று வாழ்வதைவிட அதிகமான
தொகையை பயத்திற்காக மட்டுமே ஒதுக்குவது அறிவுடைய
செயலாகுமா?  ஆனால் நிச்சயம் இந்த நிலை மாறித்தான் ஆக
வேண்டும்.


உலக மக்கள் அனைவரிடத்திலும் இது குறித்த விழிப்புணர்வு
வேண்டும். அதற்கு மக்களின் மனதில் மாற்றம் வேண்டும்.
அதை யார் ஏற்படுத்துவது? புத்தர், காந்தி, வள்ளலார், வேதாத்திரி
மகரிசி போன்ற மகான்கள் தோன்றிய இந்த புண்ணிய
பூமியிலிருந்துதான் அது துளிர்விட வேண்டும்.



.

Thursday, September 30, 2010

அயோத்தி தீர்ப்பு

நாம் 21 ஆம் நூற்றாண்டில்தான் இருக்கிறோமா என்று சந்தேகமாக
இருக்கிறது. கடவுள் என்பது என்ன? என்பதிலேயே இன்னும்
குழப்பங்களோடே இருக்கிறோம். மதத்தைப் பற்றிய தெளிவும்
இல்லாமல் இருக்கிறோம். நூறு ஆண்டுகளுக்கு முன்பே
விவேகானந்தர் நதிகள் எங்கெங்கு தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரேகடலைச் சென்று அடைவதைப் போல் எங்கெங்கோ
எந்தெந்தப் பெயராலோ மதங்கள் தோன்றினாலும் அவையெல்லாம்
ஒரே இறைவன் என்ற எல்லையற்ற எங்கும் நிறைந்த பேராற்றலை
அடைவதற்கான வழிகளே என்று உலகம் முழுவதற்கும் மதம்
பற்றியும் கடவுள் பற்றியும் தெளிவாக்கியுள்ளார். இன்றளவும்
இதைபற்றிய தெளிவுக்கு நாம் வராமல் இருப்பது அறியாமையின்
இருளிலே நாம் தெரிந்தே வீழ்ந்து கிடக்கிறோம்.


ஒரு காலத்தில் இந்து மதத்திலேயே சைவசமயத்தவரும்
வைணவ சமயத்தவரும் தத்தமது வழிபாடே உயர்வானது
என்று பெரும் மோதல்கள் நடந்துள்ளது. (கமலின் தசாவதாரத்தின்
துவக்க காட்சி நினைவு கூர்க,) ஆனால் இன்று ஒரே வளாகங்களில்
சிவன் கோவிலும் பெருமாள் கோவிலும் கட்டப்படுகிறது.
சிவனையும் பெருமாளையும் எல்லா மக்களும்தான் வணங்குகின்றனர்.
அறியாமையால்தான் அக்காலத்து மக்கள் கருத்து வேறுபாடு
கொண்டு பெரும் துண்பத்துக்கு ஆளாகி இருக்கின்றனர்.

இதைவிட மேலாக சபரிமலையின் எருமேலியில் சாஸ்தாவின்
தோழரான வாபரின் மசூதிக்கு அனைத்து ஐயப்பன்மார்களும்
சென்று வாபரை வழிபடுகின்றனர். அங்கே இந்துக்களும்
இஸ்லாமியர்களும் சகோதர வாஞ்சையுடன் பழகுகின்றனர்.
ஐயப்பனுக்கு வாபர் தோழரான போது இராமனுக்கு பாபர்தோழராக
இருக்கமாட்டாரா? இல்லை இந்த விசயம்தான் இந்து மக்களுக்கும்
இஸ்லாமிய மக்களுக்கும் புரியாதா?

வேலாங்கன்னி மேரிமாதா கோவிலுக்கு போகாத இந்துவோ
இஸ்லாமியரோ உண்டா? நாகூர் தர்க்காவுக்கு
போகாத இந்துவோ கிறிஸ்துவரோ உண்டா?


எங்கும் நிறைந்த பேராற்றலின் இயல்பு இயல் (இயற்பியல்)
காரணமாகவே. இப்பிரபஞ்சம் தோன்றியதாகவும் அதற்கு
கடவுள் என்றோ  வேறு என்ன பெயர் வேண்டுமானாலும்
கொடுத்துக் கொள்ளுங்கள் என்று ஸ்டீபன் ஹவ்கின்ஸ்
என்ற அறிவியல் அறிஞர் கூறுகிறார். இதையே சுத்த
வெளியின் தன்னழுத்தச் சூழ்ந்தலுத்தும் ஆற்றல்
என்று வேதாத்திரி மகரிசி பகர்கிறார்.

எங்கும் நிறைந்த பேராற்றலைத்தான்
சிலர் ராம் என்கிறோம் சிலர் ரஹிம் என்கிறோம்
சிலர் மாரியம்மன் என்கிறோம் சிலர் மேரிமாதா என்கிறோம்
சிலர் கிறிஸ்து என்கிறோம் சிலர் கிருஸ்ணன் என்கிறோம்

ஒரே வளாகங்களில் சிவனுக்கும் பெருமாளுக்கும் கோவில்
கட்டுவது போல் ஒரே வளாகங்களில் இராமனுக்கும் அல்லாவுக்கும்
கோவில்கட்டி எல்லா மக்களும் சேர்ந்தே வணங்கக் கூடிய அளவு
மக்கள் தெளிவாகத்தான் இருக்கிறார்கள்.  ஆனால் இதற்கிடையில்
யாரோ குளிர்க்காயவதற்காக காலம் தள்ளிப்போகிறது.


ஹரித்துவாரில் அமைதிப் பேரணி நடத்திய இந்து, முஸ்லிம் மதத் தலைவர்கள்.


.

Sunday, September 19, 2010

ஸ்பைரூலினா என்றொரு அற்புதம்

 

ஸ்பைரூலினா என்பது ஒருவகை பாசி. ஸ்பைரூலினா
உலகில் உள்ள தாவர உணவிலேயே மிகவும் சக்தி
அதிகம் உள்ளது . ஆய்வாளர்கள் ஒரு கிராம்
ஸ்பைரூலினாவில் ஒரு கிலோ பழத்தில் உள்ள
சக்திக்கு இணையான சக்தி உள்ளது என்கின்றனர்.
பாண்டிச்சேரி அரவிந்தர் ஆசிரமத்திலும் சென்னையில்
சில இடங்களிலும், சென்னை கால்நடை பல்கலை-
கழகத்திலும் இதை வளர்த்து வருகின்றனர்.
இது நல்ல சத்தான உணவாக மட்டுமன்றி
நிறைய நோய்களுக்கு மருந்தாகவும் பயன்படுகிறது.
இதை மாத்திரைகளாகவும்,  எலுமச்சையுடன் சேர்த்து
குளிர்பானமாகவும், பலகாரங்களிலும் சேர்த்து
உண்ணலாம்.

இதைப்பற்றிய மேலும் விபரங்கள் கீழே
 
Typical Analysis

items in percentage
protein 60-63%     
(3 times higher than beef, fish or pork . 6 times higher than eggs. 2 times higher than soy beans)

minerals 7-13%
(including Calcium, Potassium, Magnesium, Zinc, Phosphorus)

fibre 8-10%
(4 times higher than flour or corn)

vitamin B12 0.2-0.3mg
( 3~4 time higher than animal liver)

beta carotene 140-330mg
(5 time higher than carrots, 40 times higher than Spinach)

carbohydrate 15-25%
lipid 6-8 %

chlorophyll 1000-2000mg
(more than 20 times higher than wheat grass)

calcium 130mg
(10 times higher than milk)

iron 33mg
(65 times higher than spinach, 30 times higher than beef, 5 times higher than soy bean)


Contents of Spirulina


* Predigested proteins

* amino acids

* chlorophyll

* essential fatty acids

* gamma-linolenic acid (GLA)

* Vitamin A

* Beta-Carotene

* Vitamin E

* Vitamin B complex, notably Vitamin B 12


To be useful in the Treatment of:


* Diabetes

* Glaucoma

* Liver pathologies

* Cancer

* Increasing neurotransmitter formation

* Acting as an appetite suppressant

* Hair loss

(குறிப்பு : சில விபரங்கள் பிற தளங்களிலிருந்து சேகரிக்கப்பட்டது)
மேலும் இது குறித்த விபரங்களுக்கு தொடர்பு கொள்ளவும்
வி.என்.தங்கமணி 
Cell No.:  9750724615   
Email:   n_thangamani@yahoo.com 

ஸ்பைரூலினா  மாத்திரைகள் மற்றும் பொடி வேண்டுவோர்
தொடர்புகொள்ள :
ரத்தினராஜசிங்கம் :  சென்னை . http://www.oferr.org/content.php?id=179
செல் நெம்பர் : 9884000413  
 
  
 
.

Sunday, April 11, 2010

தவம் - VI

குரு வேதாத்திரி மகான் அவர்களை உள்ளத்தில் நினைந்து வணங்கித் தொடங்குகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு யோக நண்பர்களுக்கு வணக்கம்!

தவத்தில் ஆசனம், பிரணாயாமம், இயமம், நியமம் ஆகியவை குறித்து பார்த்தோம். இங்குபிரத்தயாகாரம் மற்றும் தாரணை குறித்து பார்ப்போம்.

பிரத்யாகாரம்

நம் மனம் புறப்பொருள்களை நோக்கி ஓடுவதைத் தடுத்தல் பிரத்யாகாரம் எனப்படுகிறது.நாம் உயிர் உட்பொருள். உயிரில் உள்ள பதிவுகளுக் கேற்ப மனம் அலையாக உண்டாகிறது. மனம் நமது தோல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காதுகள் வழியாக அழுத்தம், சுவை, மணம், ஒளி மற்றும் ஒலியாக புறப்பொருள்களை நோக்கி ஓடி ஓடி நமது உயிர்ச் சக்தியை வீணாக்குகிறது. இவ்வாறான மன ஓட்டத்தைத் தடுத்தலே பிரத்யாகாரம் எனப்படுகிறது.

தாரணை
தாரணை என்பது புறத்தே ஓடும் மனதை தடுத்த பின் ஓரிடத்தில் குவித்தலே தாரணை ஆகும். புறத்தே விரிந்து ஓடும் மனதை தடுத்து நமது உடலில் இதயம், உச்சந்தலை, நெற்றி புருவ மத்தி ஆகிய ஏதேனும் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு மலர், ஒரு இலை போன்ற ஒரு பொருளிலோ குவித்தல் தாரணை ஆகும்.

உதாரணத்திற்கு சிதறி ஓடும் சூரிய ஒளிக்கு சக்தி குறைவு, இதையே ஒரு குவிஆடி மூலம்குவிக்கும் போது தீப்பிடிக்குமளவு ஆற்றல் உண்டாகிறது. அது போலவே பலவற்றை நோக்கிசிதறி ஓடும் மனத்தை தடுத்து ஒன்றில் குவிக்கும் போது அபரிமிதமான ஆற்றல் உண்டாகிறது.

தவத்தை நோக்கிய பாதையில் ஆசனம், பிரணாயாமம் ஆகியவை முதல்படி பிரத்தயாகாரம் மற்றும் தாரணை என்பது இரண்டாம் படி ஆகும். இந்தப் பாதையில் பயணிக்க ஏதுவான சூழிநிலையை உருவாக்குவதே இயமம், நியமம் ஆகும். தியானம், சமாதி ஆகியவைமூன்றாவது படியாகும் அது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே.


நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும் இறை அருளால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்.

Monday, April 5, 2010

உங்கள் பணத்தை சொத்தாக்கி உலகுக்கு உதவுங்கள்


உங்கள் பணத்தை யாருக்கும் தானம் செய்யாமல், பணம் பன்மடங்காகப் பெருகும் விதத்திலான சொத்தாக்குவதன் மூலம் இந்த உலகுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேவையைச் செய்ய முடியும்.

கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

உதாரணத்திற்கு
ஈரோடு மாவட்டம், பவானி தாலூக்கா, அந்தியூர் பகுதிகளின் கிராமத்தில் 1990 களில் ஏக்கர் 70 ஆயிரத்திற்கு விற்ற தண்ணீர் பாயும் பூமி 20 ஆண்டுகளில் 7 லட்சமாக விற்கிறது. இருபது ஆண்டுகளில் 10 மடங்கு விலையேற்றம் ஆகியிருக்கிறது. தற்பொழுது கட்டுமானப் பணிக்காக மரங்களின் தேவை நாளுக்கு நாள் விலையேறிக்கொண்டேயிருக்கிறது.

எனவே கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

நீங்கள் நகரத்திலோ, வெளி நாட்டிலோ வசிப்பவரா ? நல்ல வேலையிலிருப்பவர் அல்லது நல்ல தொழில் நடத்துபவரா? இந்திய கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி மரம் வளருங்கள். இந்தியா வளர்ச்சியடைந்து வருவதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. கட்டுமான பணிக்காக மரங்களின் தேவையும் கூடிக் கொண்டே இருக்கிறது. எனவே உங்கள் முதலீட்டுக்கு நல்ல மதிப்பேற்றமும் உண்டாகிறது. உலகுக்கு உதவவும் முடிகிறது.

சுமார் 1000 ஏக்கர் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு
 100 ஏக்கர் மரம் வளர்ப்பதன் மூலம் நல்ல சுற்றுச் சூழல்,
மழை வளம், நில வளம், நிலத்தடி நீர் மிக்க வளமான
கிராமத்தை உருவாக்க முடியும்

விவசாய வருமானத்திற்கு வருமான வரி இல்லை
என்பது மேலும் மகிழ்ச்சியான விசயமாகும்.

ஒரு 10 ஏக்கர் மரம் வளர்பிற்கான திட்ட மதிப்பீடு.

முதலீட்டுச் செலவினங்கள் (76 லட்சம்)
ஒரு 10 ஏக்கர் தோட்டத்தின் விலை 70 லட்சம்
சொட்டு நீர்அமைக்க 4 லட்சம்
வேலி அமைக்க 2 லட்சம்

நடப்புச் செலவினங்கள் ( 3 லட்சம் 57 ஆயிரம் )
மரக்கன்றுகள்- 3870 ( 9 ஏக்கர்) 40 ஆயிரம்
தென்னை -60 கன்றுகள் (ஒரு ஏக்கர்) 2 ஆயிரம்
நடு கூலி 50 ஆயிரம்
உரம் மருந்து 15 ஆயிரம்
** நீர் பாய்ச்ச, காவல் சம்பளம் 50 ஆயிரம் X 5 ஆண்டுக்கு =2 லட்சம் - 50 ஆயிரம்
(**5 ஆண்டுகளில் பலன் தரக்கூடிய ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் மூலம் நடப்புச் செலவினத்தை 5 ஆண்டுகளுக்கு பின் அந்த வருமானத்தில் ஈடுகட்டிக் கொள்ளலாம்)

வருமானம்
12 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ10,000 வீதம் 1 கோடி 85 லட்சம்
20 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ20,000 வீதம் 3 கோடி 70 லட்சம்
                                170 மரங்கள் பழுது மற்றும் சேதாரம்
          மொத்தம் 3870 மரங்கள் மூலம் 5 கோடி 55 லட்சம்
(ஒரு ஏக்கர் தென்னை மூலம் வரும் வருமானம் நடப்பு செலவினமான நீர்
பாய்ச்சுதல், காவல் ஆகிய வற்றிற்கு உபயோகிக்க வேண்டி வருமான
கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை)

சொத்து மதிப்பு
நிலத்தின் மதிப்பு குறைந்தது 20 ஆண்டுகளில் 10 மடங்கு ஏறக்கூடும்

சேவை மதிப்பு
20 ஆண்டுகளில் 250 டன் காய்ந்த இலைகள் மூலம் மண் வளம் பெறுகிறது,
இதனால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராகிறது, அதிக அளவிலான
கரியமில வாயு பிராணவாயுவாக்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல்
குறைகிறது. மழையளவு கூடுகிறது.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்
n_thangamani@yahoo.com

நிலம் வாங்குதல், மரக்கன்று வாங்குதல், ஆட்கள் நியமித்தல் மேற்பார்வையாளர் நியமித்தல் தொடர்ந்த கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு உதவத்தயாராக இருக்கிறோம்.

மரம் வளர்த்தல் தொடர்பான தளங்கள்
௧.   மரங்களை வளப்போம்

Friday, March 5, 2010

நித்யானந்தாவும் சமுதாய கூத்தும்


உலகையே அல்லோலப் படுத்தும் இந்த விசயத்தை ஆராய அடிப்படையான இரண்டு விசயத்தை கவனத்தில் கொள்ளவேண்டியுள்ளது.
அவை
1. இயற்கை நியதி
2. மக்களின் பிரதிபலிப்பு

1. இயற்கை நியதி
உலகத்தில் உயிரினங்கள் தொடர்ந்து வாழவேண்டுமானால் கூடல் அவசியம், இந்த நியதி ஒவ்வொரு உயிரின் உயிரோடு கலந்த விசயம். இதிலிருந்து விலகும் உயிர்களை இழுத்து இதிலே வீழ்த்த இயற்கை எப்பொழுதும் முயற்சித்துக் கொண்டே இருக்கும். இயற்கைக்கு முரணாக வாழ்பவர் எப்பொழுது வேண்டுமானாலும் வீழலாம்.

வேதங்களில் மனித வாழ்வை பிரமச்சர்யம், கிரகஸ்தன், வானப்பிரஸ்தம், சந்நியாசம் அல்லது துறவு என நான்கு பாகங்களாக பிரித்து வாழச்சொல்கிறது. கற்கும் காலத்தில் உயிரணுக்களை விரயம் செய்தால் அறிவு வளர்ச்சி தடைப்படும் என பிரமச்சர்ய விரதம் கடைபிடிக்கச் சொல்கிறது. கற்றபின் சம்பாதிக்கும் போது மனித இனம் அழிந்து விடாமல் இருக்கும் பொருட்டு தனக்கென ஒரு குடும்பம் குழந்தை என சந்ததியை வளர்த்து கிரகஸ்தனாகச் சொல்கிறது. குடும்பக் கடமைகள் முடியும் தருவாயில் உயர்ஞான நெறிகளைத் தேடுவதை வானப்பிரஸ்தம் என்கிறது. ஞானத்தின் வெளிப்பாடாக தன் மக்கள் தன் குடும்பம் என்ற சுயநலத்தைத் தாண்டி எல்லா மக்களும் நல்வாழ்வு வாழ வேண்டும் என்ற பரந்த மனப்பான்மையில் வாழ்வதை துறவு என்கிறது.

இதை விடுத்து இளமையிலே துறவு என்பது வேத வாழ்வுக்கும் முரணாகிறது. இளமையிலே துறவு பூண்டு, யோகம் தவம் செய்து உயர்வாழ்வு வாழ்ந்தாலும் சூழல் வரும் போது இயற்கை ஆற்றல் மண்ணைக் கவ்வ வைப்பதிலிருந்து தப்புதல் கடினம்.


2. மக்களின் பிரதிபலிப்பு
யோக வாழ்வு என்பது உடலையும் மனதையும் திறம்பட பேணும் ஓர் அறிவியல்.ஒருவர் யோக வாழ்வு வாழ்ந்தால் அவருக்கு நல்லது. அவருடைய உடலும் மனமும் திறம்படும், நலன் பெறும்.நாம் நலம் பெற வேண்டுமானால் நாமும் யோக வாழ்வு வாழலாம் அதை விடுத்து அவரை தலையில் வைத்து யார் கொண்டாடச் சொன்னார்கள்? காலில் பாலூற்றி யார் கழுவச் சொன்னார்கள்? காரணம் சுயநலம். அவரைக் கொண்டாடினால் சொத்தும் சுகமும் பெருகும் என்ற மூடத்தனம். அளவுகடந்த சுயநலம் அறிவுக்கண்ணை மறைக்கிறது. பிறரை தலையில் வைத்துக் கொண்டாடுவது அல்லது தரையில் போட்டு மிதிப்பது இதைத்தானே நாம் செய்து கொண்டிருக்கிறோம். நம்மை நாம் என்றாவது கொண்டாடியிருக்கிறோமா? நமது நல்ல தன்மைகளை இனங்கண்டு வளர்த்திருக்கிறோமா ? அந்த விசயத்தை ஊடகங்கள் திரும்பத்திரும்ப காண்பிக்க காரணம் என்ன ? மக்கள் அவ்வாறான நிகழ்ச்சிகளை விரும்பிப்பார்பதாலேயே ஊடகங்கள் திரும்பத்திரும்பக் காண்பிக்கின்றன. அவ்வாறான நிகழ்ச்சிகளை மக்கள் புறக்கணிப்பதாக இருந்தால் எந்த ஊடகங்களும் இம்மாதிரியான நிகழ்ச்சிகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காது. நமது சமுதாயத்தின் தரம் அந்த அளவில்தான் இருக்கிறது. எங்கோ மறைவிடத்தில் நடந்த தலைகுனிவுக்கான சமாச்சாரத்தை பொழுதெல்லாம் வெளிச்சம் போட்டு இளைஞர்களின் மனதில் விசத்தை பாய்ச்சுமாறு செய்வதற்கும் நாமே காரணம். மூட நம்பிக்கையிலும் சுயநலத்திலும் மூழ்கிக்கிடக்கும் நமது சமுதாயத்தில் இது போன்ற செயல்களுக்கு மக்களின் அறியாமையே முழு முதற்காரணம்.

Monday, February 8, 2010

இது என்ன ?


இது என்னவென்று கண்டு பிடியுங்கள் பார்க்கலாம்.

நிறைய நிலாக்களா ?

ஒரு துருப்பு : இது சூரிய கிரகணத்தோடு சம்பந்தபட்டது .


ரொம்ப யோசிக்க வேண்டாம்.


மேலே படியுங்கள்.

ஒன்றுமில்லை

கிரகண நாளில்

கிடந்தது வாசலில்

நூறுநிலா பிறைகள்.

எப்போதும் முழுவட்டம்

இப்போது பிறை நிலவாய் !

கிளுக்கி வைத்தேன்

பார்க்காதவர்கள் பார்த்துக்கொள்ளட்டும் என்று.

கிரகணம் காண

கருவியொன்றும் வேண்டாம்.

பந்தல் வாசல்

வெயில் காட்டும்.

பளிச்சென்று .....

Sunday, January 24, 2010

இளமை எனும் பூங்காற்று


கவர்ச்சி படங்களையும் ஒன்றுக்கும் உதவாத விசயங்களையும் எழுதி இளய தலைமுறையின் மனதில் மெல்ல நஞ்சைக் கலக்கும் பத்திரிக்கைகளுக்கு மத்தியில், இளைஞர்களின் மீது நம்பிக்கை வைத்து ஆக்கபூர்வமான விசயங்களை மட்டுமே கையிலெடுத்து அமைதியாய் ஒரு புரட்சியைத் தொடங்கியிருக்கும் புதிய தலைமுறை என்ற பத்திரிக்கையைப் படித்தேன். கல்வி, தொழில், ஆராய்ச்சி, குழந்தை தொழிலாளர் ஒழிப்பு, மரம் வளர்க்கும் கிராமம், சுய தொழில் குழுக்கள் என்று அத்தனையும் பயனுள்ள விசயங்கள். நமது அறிவார்ந்த இளைஞர்கள் மீது ஆக்கபூர்வமான நம்பிக்கை கொண்டுள்ள அந்த பத்திரிக்கையின் ஆசிரியர்குழுவுக்கு எனது நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். இது போன்ற பத்திரிக்கைகளால் தான் திறமையும், நேர்மையும், நம்பிக்கையும் கொண்ட இளைஞர்களை ஒருங்கிணைத்து வழிகாட்டி வலிமையான பாரதத்திற்கு வித்திட முடியும். புதிய தலைமுறை பத்திரிக்கையும் அதைச்சார்ந்த அனைவரும் வாழ்க வளமுடன்.

அந்த சில நிமிடத்தில்தான்



மின்சாரம் தடைபட்ட

அந்த சில நிமிடத்தில்தான்

அழகிய நிலா வானில்

அற்புதமாய் ஜொலிக்கக் கண்டேன்.

மண்வாசல் கட்டிலிலே

மல்லாந்து பார்த்திருந்த

சிறுவயது நட்சத்திரங்கள்

சிதறாமல் இருக்கக் கண்டேன்.

பாலகனாய் இருக்கக் கண்ட

பகட்டான மின்மினியின்

எத்தனாம் தலைமுறையோ

என் வீட்டு மரத்தில் இன்னும்...

சர்க்கரை பழத்தை திண்ண

சுற்றிவரும் வெளவாள் கூட்டம்

படபடத்துப் பறக்கும் பாங்கை

பார்த்து நான் வியந்தே நின்றேன்.

இயற்கையின் பாங்கை எல்லாம்

செயற்கைதான் மறைத்தனவோ !

வேசத்தை பூசும் மாந்தர்

நே(நெ)ச முகம் மறந்தே போனோம்.