ஏத்தளிறைக்க நிழல்கிணத்தோரம் இரண்டு மரம் .
கலப்பை கட்டை வேணுமுன்னு
காட்டுக்குள்ளே நாலு மரம் .
மாடு கட்ட நிழல் வேண்டி
மறுபடியும் நாலு மரம் .
சாலையிலே அரசாங்கம்
சரமாக நட்ட மரம் .
ஊத்தெறைக்க பம்புசெட்டும்
உழவு செய்ய டேக்டரும்
நாலுவழிச் சாலை வந்து ,
நம்ம மரம் பாழாச்சு !
வாகனங்கள் பெருகியதில்
வரும் புகையும் கேடாச்சு !
ஓசோனில் ஓட்டயின்னா ...
சுற்றுச்சுழல் மாசு என்றால்...
தன் தலயில் மண்வாரி
தானே போட்டுக்கொண்டோம் !
இந்நிலையை மாற்றுதற்கு
எவரேனும் முயல்வாரோ ?