Tuesday, September 29, 2009

ரகசியம்

வருவாய் என்கிற நம்பிக்கையில்தான்
நாட்கள் நகர்ந்துகொண்டே இருக்கிறது
மேகத்தை போலவே பொய்த்துபோகிறது
பாலாய்போன பாவியின் நம்பிக்கை
இன்றில்லை நாளையென்று
தவணை தள்ளிப்போகிறது
ஏனோ தெரியவில்லை மானைக்  காணவில்லை
கோபமா ? இருக்காது
பிடிக்கவில்லையா ? தெரியாது
பயமா ? தேவையில்லை
பாவமா ? ஒன்றுமில்லை
யாருக்கு தெரியும்
இந்த பெண்ணின் மனதில் உள்ள
ரகசியங்கள் .
- ivan ... VN.தங்கமணி

No comments: