Thursday, March 31, 2011

விவேகானந்தரின் கனவு





சிகாகோ சர்வமத சபையில் உலகப்புகழ் வாய்ந்த
சொற்பொழிவாற்றிய 8வது நாள் 19-09-1983
அன்று விவேகானந்தர் எதிர்காலத்தில்
மதம் என்பது எவ்வாறு இருக்க வேண்டும்
என தனது உள்ளக்கிடக்கையை வெளிப்படுத்தி
-யிருக்கிறார். அந்தக் கருத்துகளை அப்படியே
தன்னுள் கொண்டு திகழ்கிறது, மகான் வேதாத்திரி
மகரிசியால் தோற்றுவிக்கப்பட்டுள்ள உலக பொது
அருள் நெறி சமயம்.


விவேகானந்தர் அன்று பேசி கருத்துக்கள்.-

என்றாவது உலகம் தழுவிய மதம் (UNIVERSAL
RELEGION)   என்ற ஒன்று உருவாக வேண்டுமானால் அது
இடத்தாலும் காலத்தாலும் எல்லைப்படுத்தப்
படாததாக இருக்க வேண்டும், அந்த மதம்
யாரைப்பற்றி பிரச்சாரம் செய்கிறதோ,
அந்தக் கடவுளைப் போன்று அது எல்லையற்றதாக
இருக்க வேண்டும். சூரியன், தன் ஒளிக்கிரணங்களை
எல்லார் மீதும் சமமாக வீசுவது போன்று
அது கிருஸ்ண பக்தர்கள், கிருஸ்து பக்தர்கள்,
ஞானிகள், பாவிகள் எல்லோரையும் சமமாக
எண்ண வேண்டும். அது பிராமண மதமாகவோ
பெளத்த மதமாகவோ, கிருஸ்தவ மதமாகவோ,
முகமதிய மதமாகவோ இருக்காமல் இவற்றின்
ஒட்டு மொத்தமாக இருப்பதுடன், இன்னும்
வளர்ச்சியடைய எல்லையற்ற இடம் உள்ளதாக
இருக்க வேண்டும். காட்டுமிராண்டி முதல்
ஞானியர் வரை எல்லோருக்கும் இடமளித்து
தன் அளவற்ற கரங்களால் எல்லோரையும்
தழுவிக்கொள்ளும் பரந்த மனப்பான்மை
உள்ளதாக இருக்க வேண்டும். அந்த மதத்தில்
பிற மதத்தினரை மதித்தி நடக்கும்
பாங்கு இருக்கும். ஆண், பெண் இருபாலரிடமும்
தெய்வத்தன்மை இருப்பதை ஏற்றுக்கொள்ளும்
மனித இனம் தன் உண்மையான தெய்வீகத்
தன்மையை உணர்வதற்கு உதவி
செய்வதே அதன் நோக்கமாக இருக்கும்.
அதன் முழு ஆற்றலும் அதற்கே பயன்படும்.

விவேகானந்தரின் மேற்கண்ட கனவுகளோடு
தனிமனித ஒழுக்கம் குடும்ப அமைதி
சமுதாய மேன்மை உலக அமைதி ஆகியவற்றையும்
தனது கொள்கையாகக் கொண்டு இயங்கிவரும்
உலக பொது அருள்நெறி சமயம் என்பது
உலக மக்கள் அனைவரையும் மேம்படுத்தவல்லது.
மகான் வேதாத்திரி மகரிசியால் தோற்றுவிக்கப்பட்ட
உலக சமாதான இயக்கம் இதை செயல்படுத்தி
வருகிறது.
.
.
.
 







3 comments:

Pranavam Ravikumar said...

Nicely written. But not all people agree/obey all these. If so, we might be somewhere this time. Thanks for sharing. You have a nice day!

V.N.Thangamani said...

உங்கள் கருத்துக்கு நன்றி ரவிக்குமார்
பிறர் விரும்புகிறார்கள் விரும்பவில்லை
என்பது பற்றி கவலை இல்லை.
எது உண்மையோ எது தேவையோ அதை
எழுதுவது நமது கடமையாகக் கொள்ளவோம்
வாழ்க வளமுடன்.

J RAMAKRISHNAN said...

dear mr thangamani.
The unity in diversity is to be followed because our India is a secular country.
At the same time the caste divide in all religions in our country has to be viewed very seriously ,because the progress of our next generation is affected.
so alleviate this cancerous attitude some thing has to be don
j ramakrishnan sit 98426 44482