Sunday, April 11, 2010

தவம் - VI

குரு வேதாத்திரி மகான் அவர்களை உள்ளத்தில் நினைந்து வணங்கித் தொடங்குகிறேன்.
நீண்ட இடைவெளிக்கு பின்பு யோக நண்பர்களுக்கு வணக்கம்!

தவத்தில் ஆசனம், பிரணாயாமம், இயமம், நியமம் ஆகியவை குறித்து பார்த்தோம். இங்குபிரத்தயாகாரம் மற்றும் தாரணை குறித்து பார்ப்போம்.

பிரத்யாகாரம்

நம் மனம் புறப்பொருள்களை நோக்கி ஓடுவதைத் தடுத்தல் பிரத்யாகாரம் எனப்படுகிறது.நாம் உயிர் உட்பொருள். உயிரில் உள்ள பதிவுகளுக் கேற்ப மனம் அலையாக உண்டாகிறது. மனம் நமது தோல், நாக்கு, மூக்கு, கண் மற்றும் காதுகள் வழியாக அழுத்தம், சுவை, மணம், ஒளி மற்றும் ஒலியாக புறப்பொருள்களை நோக்கி ஓடி ஓடி நமது உயிர்ச் சக்தியை வீணாக்குகிறது. இவ்வாறான மன ஓட்டத்தைத் தடுத்தலே பிரத்யாகாரம் எனப்படுகிறது.

தாரணை
தாரணை என்பது புறத்தே ஓடும் மனதை தடுத்த பின் ஓரிடத்தில் குவித்தலே தாரணை ஆகும். புறத்தே விரிந்து ஓடும் மனதை தடுத்து நமது உடலில் இதயம், உச்சந்தலை, நெற்றி புருவ மத்தி ஆகிய ஏதேனும் ஒரு பகுதியிலோ அல்லது ஒரு மலர், ஒரு இலை போன்ற ஒரு பொருளிலோ குவித்தல் தாரணை ஆகும்.

உதாரணத்திற்கு சிதறி ஓடும் சூரிய ஒளிக்கு சக்தி குறைவு, இதையே ஒரு குவிஆடி மூலம்குவிக்கும் போது தீப்பிடிக்குமளவு ஆற்றல் உண்டாகிறது. அது போலவே பலவற்றை நோக்கிசிதறி ஓடும் மனத்தை தடுத்து ஒன்றில் குவிக்கும் போது அபரிமிதமான ஆற்றல் உண்டாகிறது.

தவத்தை நோக்கிய பாதையில் ஆசனம், பிரணாயாமம் ஆகியவை முதல்படி பிரத்தயாகாரம் மற்றும் தாரணை என்பது இரண்டாம் படி ஆகும். இந்தப் பாதையில் பயணிக்க ஏதுவான சூழிநிலையை உருவாக்குவதே இயமம், நியமம் ஆகும். தியானம், சமாதி ஆகியவைமூன்றாவது படியாகும் அது குறித்து அடுத்த பதிவில் பார்ப்போம்.

நன்றி நண்பர்களே.


நீங்களும் உங்கள் குடும்பமும் உங்கள் நண்பர்களும் இறை அருளால் உடல் நலம், நீள் ஆயுள், நிறை செல்வம், உயர்புகழ், மெய்ஞானம் பெற்று ஓங்கி வாழ்கவென வாழ்த்தி மகிழ்கின்றேன்.

வாழ்க வளமுடன்.

Monday, April 5, 2010

உங்கள் பணத்தை சொத்தாக்கி உலகுக்கு உதவுங்கள்


உங்கள் பணத்தை யாருக்கும் தானம் செய்யாமல், பணம் பன்மடங்காகப் பெருகும் விதத்திலான சொத்தாக்குவதன் மூலம் இந்த உலகுக்கு மிகவும் பயனுள்ள ஒரு சேவையைச் செய்ய முடியும்.

கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

உதாரணத்திற்கு
ஈரோடு மாவட்டம், பவானி தாலூக்கா, அந்தியூர் பகுதிகளின் கிராமத்தில் 1990 களில் ஏக்கர் 70 ஆயிரத்திற்கு விற்ற தண்ணீர் பாயும் பூமி 20 ஆண்டுகளில் 7 லட்சமாக விற்கிறது. இருபது ஆண்டுகளில் 10 மடங்கு விலையேற்றம் ஆகியிருக்கிறது. தற்பொழுது கட்டுமானப் பணிக்காக மரங்களின் தேவை நாளுக்கு நாள் விலையேறிக்கொண்டேயிருக்கிறது.

எனவே கிராமப் புறங்களில் பூமி வாங்கி மரம் வளர்ப்பதன் மூலம். உங்கள் நிலத்தின் மதிப்பு பலமடங்கு ஆவதுடன் மரம் வளர்ப்பதால் பெறும் லாபமடையலாம்.இதன் மூலம் உலக வெப்பமயமாக்கத்தை தடுக்கவும், சுற்றுச்சூழல் மாசடைவதை தடுக்கவும், மண்வளத்தைப் பெறுக்கவும், மழை வளத்தைப் பெறுக்கவும், நிலத்தடி நீரைக் காக்கவும் பெறும் சேவை செய்தவராகிறீர்கள்.

நீங்கள் நகரத்திலோ, வெளி நாட்டிலோ வசிப்பவரா ? நல்ல வேலையிலிருப்பவர் அல்லது நல்ல தொழில் நடத்துபவரா? இந்திய கிராமத்தில் கொஞ்சம் நிலம் வாங்கி மரம் வளருங்கள். இந்தியா வளர்ச்சியடைந்து வருவதால் நிலத்தின் மதிப்பு உயர்ந்து கொண்டே வருகிறது. கட்டுமான பணிக்காக மரங்களின் தேவையும் கூடிக் கொண்டே இருக்கிறது. எனவே உங்கள் முதலீட்டுக்கு நல்ல மதிப்பேற்றமும் உண்டாகிறது. உலகுக்கு உதவவும் முடிகிறது.

சுமார் 1000 ஏக்கர் உள்ள ஒவ்வொரு கிராமத்திற்கும் ஒரு
 100 ஏக்கர் மரம் வளர்ப்பதன் மூலம் நல்ல சுற்றுச் சூழல்,
மழை வளம், நில வளம், நிலத்தடி நீர் மிக்க வளமான
கிராமத்தை உருவாக்க முடியும்

விவசாய வருமானத்திற்கு வருமான வரி இல்லை
என்பது மேலும் மகிழ்ச்சியான விசயமாகும்.

ஒரு 10 ஏக்கர் மரம் வளர்பிற்கான திட்ட மதிப்பீடு.

முதலீட்டுச் செலவினங்கள் (76 லட்சம்)
ஒரு 10 ஏக்கர் தோட்டத்தின் விலை 70 லட்சம்
சொட்டு நீர்அமைக்க 4 லட்சம்
வேலி அமைக்க 2 லட்சம்

நடப்புச் செலவினங்கள் ( 3 லட்சம் 57 ஆயிரம் )
மரக்கன்றுகள்- 3870 ( 9 ஏக்கர்) 40 ஆயிரம்
தென்னை -60 கன்றுகள் (ஒரு ஏக்கர்) 2 ஆயிரம்
நடு கூலி 50 ஆயிரம்
உரம் மருந்து 15 ஆயிரம்
** நீர் பாய்ச்ச, காவல் சம்பளம் 50 ஆயிரம் X 5 ஆண்டுக்கு =2 லட்சம் - 50 ஆயிரம்
(**5 ஆண்டுகளில் பலன் தரக்கூடிய ஒரு ஏக்கர் தென்னை மரங்கள் மூலம் நடப்புச் செலவினத்தை 5 ஆண்டுகளுக்கு பின் அந்த வருமானத்தில் ஈடுகட்டிக் கொள்ளலாம்)

வருமானம்
12 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ10,000 வீதம் 1 கோடி 85 லட்சம்
20 ஆம் ஆண்டு 1850 மரங்கள் ரூ20,000 வீதம் 3 கோடி 70 லட்சம்
                                170 மரங்கள் பழுது மற்றும் சேதாரம்
          மொத்தம் 3870 மரங்கள் மூலம் 5 கோடி 55 லட்சம்
(ஒரு ஏக்கர் தென்னை மூலம் வரும் வருமானம் நடப்பு செலவினமான நீர்
பாய்ச்சுதல், காவல் ஆகிய வற்றிற்கு உபயோகிக்க வேண்டி வருமான
கணக்கில் எடுத்துக் கொள்ள வில்லை)

சொத்து மதிப்பு
நிலத்தின் மதிப்பு குறைந்தது 20 ஆண்டுகளில் 10 மடங்கு ஏறக்கூடும்

சேவை மதிப்பு
20 ஆண்டுகளில் 250 டன் காய்ந்த இலைகள் மூலம் மண் வளம் பெறுகிறது,
இதனால் மழைநீர் சேமிக்கப்பட்டு நிலத்தடி நீராகிறது, அதிக அளவிலான
கரியமில வாயு பிராணவாயுவாக்கப்படுகிறது. உலக வெப்பமயமாதல்
குறைகிறது. மழையளவு கூடுகிறது.

இது குறித்த மேலும் விபரங்களுக்கு மெயிலில் தொடர்பு கொள்ளவும்
n_thangamani@yahoo.com

நிலம் வாங்குதல், மரக்கன்று வாங்குதல், ஆட்கள் நியமித்தல் மேற்பார்வையாளர் நியமித்தல் தொடர்ந்த கண்காணிப்பு போன்ற பணிகளுக்கு உதவத்தயாராக இருக்கிறோம்.

மரம் வளர்த்தல் தொடர்பான தளங்கள்
௧.   மரங்களை வளப்போம்