Thursday, December 10, 2009

எங்கே சந்தோசம்

ஒரு இலக்கை வைத்துக்கொள்ளுங்கள், அந்த இலக்கை அடைந்தவுடன் இன்னொரு இலக்கை வைத்துக்கொள்ளுங்கள். உங்கள் வாழ்க்கையில் முன்னேற இதுவே வழி. என்கிறது மேலை நாட்டு தத்துவம்.
கிடைத்ததைக் கொண்டு சந்தோசம் கொள்ளாமல் சந்தோசத்தை தள்ளிப்போடுங்கள் என்கிறது.

நமது நாட்டிலே முன்பெல்லாம் எண்ணெய் ஆட்ட செக்கு இழுக்க மாடுகளை பயன்படுத்துவார்கள். அப்போது மாட்டின் கழுத்தில் உள்ள நுகத்தடியில் ஒரு குச்சியை வைத்துக் கட்டி மாட்டிற்கு முன்னாள் ஒரு இரண்டடி தூரத்தில் ஒரு புல் கட்டை தொங்க விடுவார்கள். அந்த புல் கட்டை சாப்பிட நினைத்து மாடு நகரும் போது அந்த புல் கட்டும் நகரும். இவ்வாறானதே இந்த தத்துவம்.

சரி, நமது நட்டு சித்தாந்தம் சொல்வதென்ன : இருப்பதைக் கொண்டு மன நிறைவுடன் வாழுங்கள், மன நிறைவு பெறும்போது உங்கள் உள்ளமும் உயிரும் உன்னத ஆற்றல் பெறுகிறது. அப்பொழுது நீங்கள் செய்யும் காரியங்கள் ஒரு நிறைவுடனும், தெளிவுடனும், மனிதாபி மானம் நிறைந்ததாகவும் இருக்கும் என்கிறது. இருப்பதைக் கொண்டு சிறப்புடன் வாழச் சொல்கிறது. அதனால் பொருள் இருப்பு / இல்லை என்பதும் அதை தேடும் வேலையும் அதன் போக்கில் நடத்துவோம் . ஆனால் ஒவ்வொரு கணமுமே எது இருக்கிறதோ அதை மன நிறைவுடன் துய்ப்போம் என்கிறது.

இப்பொழுது தெரிகிறதா மேலை நாட்டில் பொருள் வளம் படைத்திருந்தும். மன வளத்திற்கு கீழை நாட்டின் சித்தாந்தத்தை தேடுவதன் ரகசியம்.

பதிவர்கள், வாசிப்பவர்கள் சந்திப்பு

7 comments:

blogpaandi said...
This comment has been removed by the author.
blogpaandi said...

நல்ல கருத்து. நன்றி.

ஹேமா said...

மணி,காலை வேளையில் நல்லதொரு சிந்தனை.

பூங்குன்றன்.வே said...

கருத்துள்ள பதிவு. வாழ்த்துக்கள்.

அன்புடன் நான் said...

அழகான நல்ல சிந்தனை வாழ்த்துக்கள்.

V.N.Thangamani said...
This comment has been removed by the author.
V.N.Thangamani said...

///பின்னூட்டமிட்ட ///
ப்ளாக் பாண்டி
ஹேமா
வே. பூங்குன்றன்
சி. கருணாகரசு
ஆகியோர்களுக்கு நன்றி
வாழ்க வளமுடன்.