Friday, November 13, 2009

மணமுடிக்க போவோற்கு

மணமுடித்து வாழுகின்ற
மக்களோ பலகோடி
மண்ணில்தான் நடக்கின்றார்
வானிலே பறப்பதில்லை

தேவ லோகத்து
தெவிட்டாத துணை வருமோ
கற்பனையில் கோட்டை கட்டி
காத்திருந்து மணமுடிக்க

எதார்த்தம் தண்டியொரு
எதிர்பார்ப்பு இருக்குமெனில்
உண்மை நிகழ்வுகளோ
உள்ளத்தை நெருடச் செய்யும்

மோகமது முப்பதுநாள்
ஆசையது அறுபதுநாள்
அதன் பின்னே வருவதெல்லாம்
அற்புதமாய் தோன்றது

என் காலில் நான் நிற்பேன்
உன் காலில் நீ நிற்பாய்
இணைந்து கைகோர்த்து
இனிமையாய் வாழ்ந்திடுவோம்

குறைகண்டு சுட்டினாலும்
நிறைகண்டு வாழ்த்திவிட
வாழ்க்கைத் தேர் அசையாமல்
வசந்தமாய் ஓடிவரும் .

யோகம் தவம் குறித்த எனது பதிவைக் காண இங்கே சொடுக்குங்கள்

4 comments:

கலகலப்ரியா said...

அருமைங்க... நல்லா சொல்லி இருக்கீங்க..

vasu balaji said...

அருமையா இருக்குங்க.

ஹேமா said...

மணி,வாழ்வியலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.கொஞ்சம் யோசிக்க வைக்கிறீங்க.

V.N.Thangamani said...

/// முதல் பினூட்டத்திற்கு நன்றி பிரியா ///
/// வானம்பாடிகள் அய்யாவிற்கு நன்றி ///

///மணி,வாழ்வியலை அழகாய் சொல்லியிருக்கிறீர்கள்.கொஞ்சம் யோசிக்க வைக்கிறீங்க. ///
என் நோக்கம் இதுதான் ஹேமா, யாரோ ஒரு சிலரேனும் யோசித்து முடிவெடுத்து வாழ்க்கையில் சுபிட்சம் பெறவேண்டும் என்பதே என் எழுத்தின் நோக்கம். உங்களின் இந்த பினூட்டம் அதை நோக்கி போய்க்கொண்டு இருக்கிறேன் என்பதை உறுதிப்படுத்துகிறது. மிக்க நன்றி. ( இப்போது எனது அனைத்து பதிவுகளையும் மீண்டும் ஒருமுறை படித்து பாருங்கள் புரியும் )