Sunday, October 25, 2009

கங்கை காவிரியாள்

இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் ....
கடலில் வீணாக
கடந்தேகும் கங்கைதனை
காவிரி பெண்ணோடு
கை கோர்க்க செயல் வேண்டும்.
எனவே எழுதுங்கள் ...
எப்போதும் பேசுங்கள் ...
உங்கள் பேச்சே
உங்கள் எழுத்தே
விதையாகி வித்தாகி
விரைந்து செயலாகட்டும்
விளைந்து வளம் பெருகட்டும்.
இன்றில்லை என்றாலும்
இரு நூறு ஆண்டாயின் . . .

4 comments:

Anonymous said...

I'm appreciate your writing skill.Please keep on working hard.^^

கலகலப்ரியா said...

அருமைங்க..

ஹேமா said...

அழகாகச் சொல்லியிருக்கிறீர்கள் மணி.எப்போதும் எங்கள் எழுத்துக்கள் வருங்காலத்து ஆவணக் கோவைகள்.

ஈ ரா said...

நன்று...உன்னத திட்டம் முழுமை பெறட்டும் - நம் பேரப் பிள்ளைகளுக்காவது தவித்த வாய்க்கு தண்ணீர் கிடைக்கட்டும்