Tuesday, September 29, 2009

ஒரு தேவதை கண்டேன்


வட்ட நிலவு முகம்
வண்ண நிறத்து உடை
சங்கு கழுத்தினிலே
சற்றோரம் ஒரு மச்சம்
சித்திரம் வரைந்தவன்
திருஸ்டி பொட்டு வைத்தானோ
கன்னம் கோவயடி
கருங்கூந்தல் மேகமடி
சிரிக்கும் உதட்டுகுள்ளே
சிறிய பல்வரிசை
கிளியின் மூக்கழகு  
கீர்த்தனம் பண்ணுதடி
என்னை மயக்கும் கண்கள்
என்னமாய் இருக்குதடி
உண்மை உரைக்கின்றேன்
உனக்கு நிகரில்லை
நீயே கவிதையடி
உன்பெயர் தேவதையோ !

ivan. VN.தங்கமணி

No comments: